அனிதாவை கடுப்பாக்கிய ஆரி ரசிகர்... விளாசி தள்ளிய அனிதா..." ஆரி என் நம்பிக்கைய ஒடச்சது"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம்அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் அவர் ஆரியிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் போட்டி என்று வந்துவிட்டால் அனிதா புலியாக மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடுமையான போட்டியாளராக இருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா முதல் முறையாக ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழே ஆரி ரசிகர் ஒருவர் "ஆரி ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள். ஆரி  எப்பொழுதுமே சிறப்பானவர். ஆரியின் ரசிகர்கள் நினைத்தால் எதுவேணும்னாலும் செய்வோம். உங்களை வெளியேற்றியது போல" என்று கடுமையாக கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள அனிதா "ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்றது ஓட்டு போடுகிறவர்களுக்கு தான் அசிங்கம் ப்ரோ. நல்லா விளையாடாதவங்கல தான் வெளியே அனுப்பனும். அதுதான் பிக்பாஸ் ஓட்டு நடைமுறை. இதனால் தான் தகுதி இல்லாத பலர் உள்ளே இருக்கின்றனர். இது ஆரிக்கு பெருமை இல்லை. இதை கேட்ட ஆரி பீல் தான் பண்ணுவாரு. உங்களுடைய கமெண்டுக்கு என்னுடைய அனுதாபங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் "ஆரி ரசிகர்களின் ஓட்டு எனக்கு வந்துட்டு இருந்ததுனு சென்றது எனக்கு பெருமை அல்ல. அப்படி ஆரிவுடைய குறைய சொல்லாம சப்போர்ட் பண்ணி அந்த ஓட்டுல ஃபைனல் போவதை விட, அவர் என் நம்பிக்கையை உடைத்தத சொல்லிக் காட்டி, எனக்கே எனக்காக மட்டும் ஓட் பண்றவங்கள ஓட்டுகளோட வெளியே வந்ததற்கு பெருமைபடுகிறேன். ஆரி சகோதரருக்கு எனது வாழ்த்துக்கள். இதுதான் என்னுடைய பிக்பாஸ் பற்றிய கடைசி பதிவாக இருக்கும். நான் ரியல் உலகத்திற்கு வந்து விட்டேன். யாரும் 100% சரி கிடையாது" என்று கூறியுள்ளார்.

அனிதாவை கடுப்பாக்கிய ஆரி ரசிகர்... விளாசி தள்ளிய அனிதா..." ஆரி என் நம்பிக்கைய ஒடச்சது" வீடியோ

Tags : Anitha

தொடர்புடைய இணைப்புகள்

Anitha reply to aari fan after biggboss அனிதாவை கடுப்பாக்கிய ஆரி ரசிகர்

People looking for online information on Anitha will find this news story useful.