பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு சனம் வரவில்லையா?.... ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த அனிதா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி  முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு. எனவே அடுத்ததாக ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடக்கும் பிக்பாஸ் கொண்டாட்டத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதிலும் அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களில் பலவற்றிலும் சனம் ஷெட்டியை மற்றும் காணவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து, பல ரசிகர்களை சேர்த்தவர் சனம் ஷெட்டி. அவர் வெளியேறிய பின்பு கூட பலரும் "No Sanam No Biggboss' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். எனவே ஒருவேளை சனம் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரவில்லையோ என்று அவரது ரசிங்கர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதுபற்றி அனிதா கூறுகையில் "இந்த புகைப்படம் பிக்பாஸ் பெண் போட்டியாளர்களுடன் எடுக்கப்பட்டது. சனம் மட்டும் மிஸ்ஸிங். கொஞ்சம் சீக்கிரமா கிளம்பிட்டாங்க. நீங்க எல்லாரும் கேப்பீங்க அதனால்தான் முன்னாடியே சொல்லிட்டேன். மற்றும் கேபியையும் காணோம்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

Tags : Sanam

Anitha post about biggboss kondattam பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு சனம் வரவில்லையா

People looking for online information on Sanam will find this news story useful.