எல்லாமே 'தேவையில்லாத' ஆணி... அனிதாவுக்கு எகிறும் ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸில் காலர் டாஸ்க் மீண்டும் தொடர்ந்தது. ரம்யா பாண்டியன்-ஷிவானி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கொஞ்சி கொண்டனர். இதனால் அவர்கள் பேசியது பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நிஷா-ரமேஷ் இருவரும் பேசியதில் நிஷா விட்டுக்கொடுத்து விட்டார். ஆனால் ரியோவுக்கு போன் செய்த அனிதா அவரை வச்சு செய்து விட்டார்.

நீங்க எடுக்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். நேரடியா எந்தவொரு கருத்தையும் சொல்ல மாட்றீங்க. பாலாஜியை கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் அஜீத்தை கேட்குறீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் புடிக்கலன்னு தெரிஞ்சுட்டா அதப்பத்தி பேச மாட்டேன் சொல்றீங்க. யாராவது பேச வந்தாலும் நீங்க காது கொடுத்து கேட்கல. என எக்கச்சக்க கேள்விகள் கேட்டு திணறடித்து விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இதை வெறும் டாஸ்க்கா நெனச்சு, விட்டு கொடுக்காம செஞ்சது நீங்க மட்டும் தான் என அவரை புகழ்ந்து வருகின்றனர். வேறு யாரும் பெரிதாக அனிதா அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், இந்த ஆட்டத்தை நீங்கள் சரியாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள் எனவும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அனிதா நாமினேட் லிஸ்டில் இருந்தாலும் அவர் நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Anitha handled Caller Task so awesome, fans praised

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.