பிக்பாஸ் சொன்ன ஒரு வார்த்தை... போக 'வேணாம்'னு சொன்னாரு கதறியழுத அனிதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எதிர்ப்பார்த்தது போல நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சினை நேற்றும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தது. தனியாக சென்று பாத்ரூமை சாத்திக்கொண்டு அனிதா அழுக, பதறிப்போன போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர். ஆனால் யார் என்ன சொன்னாலும் அனிதாவால் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை போல.

என் ஹஸ்பெண்ட் இங்க வர வேணாம் சொன்னாரு நான்தான் கேட்கல, நான் தெரியாத்தனமா இங்க வந்துட்டேன் என சோமிடம் சொல்லி வருத்தப்பட்டார். தொடர்ந்து ஆரி, பாலாஜி, ரம்யா, நிஷா என ஆளாளுக்கு அவருக்கு அட்வைஸ் செய்தும் இந்த பிரச்சினை முடியவில்லை. நீங்க யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணல என மறுபடியும் ஆரம்பித்தார். கடைசியில் கன்பெக்ஷன் ரூமுக்கு சென்று பிக்பாஸுடன் பேசினார்.

அவர் அமைதியாக இருந்ததை பார்த்து என்ன அனிதா ஹாய் சொல்லல என பிக்பாஸ் கேட்டு அவரை இயல்புக்கு கொண்டு வந்தார். உங்க போட்டியை நீங்க விளையாடுங்க மக்கள் தீர்ப்பு சொல்லட்டும்  என சொன்ன பிக்பாஸ், தொடர்ந்து உங்க ஹஸ்பெண்ட் கூட நாங்க பேசிட்டு தான் இருக்கோம். கண்ணுக்குட்டியை கேட்டோம்னு சொல்ல சொன்னாரு என்று சொல்ல அனிதா கதறியழ ஆரம்பித்தார். பின்னர் இயல்புக்கு மீண்ட அனிதா டாஸ்க்கை ஆர்வமுடன் விளையாடினார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Anitha cried in Bigg Boss House, after a clash with Suresh

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.