"ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லெஷ்மி & சாய் பல்லவி எல்லாம் STRONG PERFORMERS ".. பாராட்டி தள்ளிய ஆண்ட்ரியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனல் மேலே பனித்துளி திரைப்படம் குறித்து சில தகவல்களை நடிகை ஆண்ட்ரியா  நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் மூலம் பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதற்கு முன்னர் சில படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்த ஆண்ட்ரியா சில  நடிகைகளுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. அவர் நடித்த தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத் தந்தன.

சமீபத்தில் 'மாஸ்டர்', 'வட்டம்' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக பிசாசு 2, நோ என்ட்ரி, மல்லிகை, கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்  வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் நவ.18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் நடிகை ஆண்ட்ரியா படம் குறித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய கதை தவிர கமர்ஷியல் மற்றும் பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது பற்றி Feed செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா, "இந்த இண்டஸ்ட்ரிக்குள்ள நான் வரும் சமயத்தில் செயல்பாடுகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. அந்த சமயத்தில் ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளே இல்லை. நான் சொல்வது ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி தான். பத்து வருடத்திற்குள் நிறைய மாறி உள்ளது.

இந்த (அனல் மேலே பனித்துளி) படத்துடைய டிரைலர் பார்க்கும் போது, டக் டக்குன்னு ஒரு ஐஸ்வர்யா ராஜேஷ் படம் டிரைலர், ஐஸ்வர்யா லக்ஷ்மி படம் ட்ரைலர், அப்புறம் 'கார்கி' சாய் பல்லவி நடிச்ச படம் டிரைலர், இது எல்லாம் பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. இவர்கள் எல்லாரும் பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார்கள். ஆனாலும், அவங்க ஸ்ட்ராங் Performers. அவங்களோட கதையில அவங்க தான் ஹீரோ, அந்த மாதிரி கதையும் பண்றாங்க. அது நல்லது தான் என நான் நினைக்கிறேன்". என ஆண்ட்ரியா கூறினார்.

"ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லெஷ்மி & சாய் பல்லவி எல்லாம் STRONG PERFORMERS ".. பாராட்டி தள்ளிய ஆண்ட்ரியா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Jeremiah Exclusive about Anel Meley Pani Thuli Movie

People looking for online information on Aishwarya Lekshmi, Aishwarya Rajesh, Andrea Jeremiah, Sai Pallavi will find this news story useful.