"கல்யாணம் ஆன மைனாவுக்கு பிராக்கெட் போடுறியா?".. கேட்டதும் க்யூட்டாக பதில் சொன்ன ஷிவின் 😍 BIGG BOSS 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது. அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ADK - அசீம் வழக்கில் அனல் பறக்கும் விக்ரமனின் வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள்  அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.

டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். அதன்படி, பலரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை அறிவித்திருந்தனர். புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொரு வழக்கும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இரவு நேரத்தில் அமுதவாணன், ஷிவின், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்த விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.  இது தொடர்பில் ஷிவினுக்கு விக்ரமன் மீது க்ரஷ்ஷா என ஜனனி, தனலட்சுமி கிண்டல் அடித்துக் கொண்டிருக்க, ஷிவினோ, விக்ரமன் தனக்கு அண்ணன் போல் என விளையாட்டாக சொல்ல, அதற்கு ஜனனி, “வாங்கோண்ணா.. ” அந்த மாதிரி போல என சொல்கிறார்.

பிராமண குடும்பங்களில் கணவரை ஏண்ணா என அழைக்கும் பழக்கம் பெண்களிடத்தில் உண்டு, அதையே ஜனனி இங்கு குறிப்பிட்டு ஷிவினை கிண்டல் அடிக்க, அப்போது அமுதவாணன், ‘ஆனால் நீ கல்யாணம் ஆன மைனாவுக்கு பிராக்கெட் போடுறியே..’ என கலாய்க்க, அதற்கு ஷிவின்,  “அத வேணா நான் ஒத்துக்குறேன். ஆனா நீ சொல்ற மாதிரி பிராக்கெட் அது இதுலாம் இல்ல. எனக்கு அவளை புடிக்கும்” என கூறுகிறார். நள்ளிரவில் ஜனனி, தனலட்சுமி, அமுதவாணன் மூவரும் ஷிவினை இப்படி அவரிடமே கிண்டலடித்து பேசிய இந்த பேச்சு பிகாஸ் பார்வையாளர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Also Read | "நான் வீக் ஆகிட்டே போறேன்.. என்னால முடியல".. திடீர்னு கதறியழுத ஜனனி.. அமுதவாணனின் அட்வைஸ்..! BiggBoss6

தொடர்புடைய இணைப்புகள்

Amuthavanan kidding Shivin with Myna Bigg Boss 6 Tamil

People looking for online information on Amuthavaanan, BiggBoss6, Biggbosstamil, Dhanalakshmi, Janany, Myna will find this news story useful.