"மோதல்ல ஆரம்பிச்ச நட்பு".. வெளியே வந்ததும் போன் பண்ணிய விக்ரமன்.. அமுதவாணன் BREAKS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "அவரு ஒரு Victim, ஏன் அப்டி பேசுனாருன்னு".. வெளிய வந்த பின் அசிம் பத்தி பேசிய விக்ரமன்!!

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களும் ஒவ்வொரு விதத்தில் திறம்பட இருந்ததால் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது. இதனைத் தொடர்ந்து, இறுதியில் அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார்.

அசிம் வெற்றி பெற்றாலும் மற்ற பல போட்டியாளர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தது. அதில் குறிப்பிடத்தக்க ஒருவராக திகழ்ந்தவர் அமுதவாணன்.

Image Credit : vijay television

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தன்னை ஒரு சிறந்த காமெடியன் மற்றும் கலைஞனாக முன்னிறுத்திய அமுதவாணன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். அங்கும் சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய காமெடி திறமை மூலம் தொடர்ந்து பலரையும் சிரிக்க வைத்ததுடன் மட்டுமில்லாமல், பல பார்வையாளர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார்.

அனைத்து போட்டியாளர்களையும் கலகலவென வைத்திருந்த அமுதவாணன், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக Finale வாரத்துக்கு முன்னேற்றம் கண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பணப்பெட்டி வைக்கப்பட அதிலிருந்த தொகையை எடுத்துவிட்டு Finale-க்கு முன்னேறாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறி இருந்தார்.

இதனையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் அவரது ஊர் மக்கள் அமோக வரவேற்பை அளித்ததுடன் மேளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கொண்டு அவரை கொண்டாடவும் செய்திருந்தனர். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்திருந்தார் அமுதவாணன்.

Image Credit : vijay television

இந்த நிலையில், லைவ் வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், தன்னுடன் ஆடிய சிறந்த குணங்கள் குறித்தும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோர் குறித்தும் சில கருத்துக்களை அமுதவாணன் பகிர்ந்து கொண்டார்.

"விக்ரமன் கூட இருந்த நட்பு ரொம்ப சூப்பரா இருந்தது. எப்பவுமே ஒரு மோதல்ல தான் நல்ல விஷயம் நடக்கும்னு சொல்லுவாங்க. அது மாதிரி ஆரம்பத்துல வந்து நாங்க ரெண்டு பேருமே சண்டை போடுவோம். ஆனா நாங்க போட்டது எல்லாமே நியாயமான சண்டை தான். சில நேரம் அவர் மேல தப்பு இருக்கலாம். என் மேலயும் சில நேரம் தப்பு இருக்கலாம் ரெண்டு பேருமே கேள்விகள் கேட்போம். அதுக்கப்புறம் எங்களுக்குள் ஒரு நல்ல ஒரு Bonding இருந்தது.

Image Credit : vijay television

ரொம்ப நட்பா இருந்தது நல்லா இருந்துச்சு. அவர் வெளிய வந்து வீட்டுக்கு போனதுக்கப்புறம் கால் பண்ணி பேசினார். உண்மையான ஒரு நட்பை இங்க இருந்து சம்பாதிச்சிட்டு போனேன் அமுதன். உங்க நட்பு கிடைத்தது நல்ல ஒரு விஷயம்ன்னு சொன்னாரு.

அதே மாதிரி, எந்த ஒரு டாஸ்க்கோ, ஆக்டிங்கோ, காமெடியா எது பண்ணாலும் அசிமோட வரவேற்பு இருக்கும்.   சூப்பர் மச்சான், நல்லா பண்ணே மச்சான்னு வீட்டுல யாரா இருந்தாலும் வரவேற்பாரு. அந்த ஒரு நல்ல குணம் அவருகிட்ட இருக்கு" என கூறினார்.

Also Read | பிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்தில் வாழ்த்திய சித்தார்த் - அதிதி.. Viral ஃபோட்டோ!!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan about vikraman and azeem in big boss house

People looking for online information on Amudhavanan, Amudhavanan about vikraman and azeem, Azeem, Vikraman will find this news story useful.