BIGGBOSS: "ஜெயிக்க வாய்ப்பில்ல.. பண பொட்டிய எடுத்து போறேன்!".. அமீர் அந்தர் பல்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay TV BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு வரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் தவிர மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாடி வருகின்றனர். குறிப்பாக பாவனி, தாமரை, பிரியங்கா, சிபி, அமீர், ராஜூ மற்றும் நிரூப் விளையாடு வருகின்றனர்.

Advertising
>
Advertising

பணப்பெட்டியுடன் வந்த நடிகர் சரத்குமார்

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு பண பெட்டியுடன் வந்த நடிகர் சரத்குமார் அந்தப் பெட்டியில் 3 லட்சம் முதல் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் இருக்கலாம், இந்த பணத்தை எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறுபவர்கள் வெளியேறலாம் என்கிற ஒரு சலுகையை அறிவித்தார்.

யாராவது ஒருத்தர் ஜெயிக்க முடியும்

மேலும் இறுதி நிகழ்ச்சியில் யாரேனும் ஒருவர்தான் வெற்றி பெறமுடியும் என்றும், சாமர்த்தியத்தை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதே சமயம் எது சரியான முடிவு என்று அவர் அவரவர்தான் தீர்மானிக்க வேண்டுமென்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்திருந்தார்.

பிரபல OTT நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஷங்கர்! காரணம் என்ன தெரியுமா?

நிரூப்பின் ஸ்ட்ராட்டஜி?

அதன்படி 3 லட்சம் ரூபாயில் தொடங்கிய இந்த பணப்பெட்டி 5 லட்சம், 11 லட்சம், 12 லட்சம் என்று ஏறிக்கொண்டே போகிறது. இதனிடையே இந்த பிக்பாஸ் பண பெட்டியை நான் எடுத்தாலும் எடுத்துவிடுவேன் என்று நிரூப் கூறிவந்தார். ஒருவேளை இவ்வாறு கூறுவதன் மூலம் மற்றவர்களுக்கு அந்த ஆசையை உருவாக்கலாம் என்று நிரூப் கருதுகிறாரோ? என சில ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்

அமீரின் அதிரடி முடிவு?

இந்நிலையில் அமீர் தற்போது 11 லட்சம் ரூபாயாக ஏறி இருக்கும் இந்த பணத்தை, தான் எடுத்துக் கொண்டு செல்லப் போவதாக தெரிவித்தார். இது பற்றி வெளியான ப்ரோமோவில் அமீர் கூறும்போது, ‘டிக்கெட் டூ ஃபினாலேவில் எனக்கு டிக்கெட் கிடைத்து இருக்கிறது என்பதால் நான் நிச்சயமாக ஃபைனல் வரை சென்று விடுவேன். ஆனால் வெற்றி பெறவில்லை என்றால் என்ன ஆவது? நான் ஜெயிக்க வாய்ப்பில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இந்த பணத்தை எடுத்துக் கொண்டு நான் இப்போது போவதுதான் சரியான முடிவு என்று எனக்கு தோன்றுகிறது” என்று கூறினார்.

ஊக்கப்படுத்திய சிபி - அந்தர் பல்டி அடித்த அமீர்

இதை கேட்டவுடன் சிபி உடனே அமீரை கட்டிப்பிடித்து தோளை தட்டி அவரது முடிவு சரியானது என்று சொல்லி ஊக்கப்படுத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் வெளியான மற்றொரு ப்ரோமோவில் அமீர், சிபியிடம், “கேமராவை பார், நான் பிராங்க் செய்தேன்!” என்று கூறி அதிர வைக்கிறார்.

"Varun-அ Kiss பண்ல!.. பாவனி - அமீர் விஷயம் தெரியாது".. BiggBoss அக்‌ஷரா பேட்டி.. வீடியோ

இதைத் தொடர்ந்து அனைவரும் சிரிக்கின்றனர். அப்போது இந்த விஷயத்தை இரவே தாமரையிடம் தான் கூறியதாக அமீர் கூற, அமீர் கூறுவது பற்றி தனக்கும் தெரியும் என்று பாவனி கூறுகிறார். அதே சமயம் அமீர் இப்படி உண்மையில் முடிவு எடுத்தாலும் அது தவறு அல்ல என சிபி மற்றும் பிரியங்கா கூறி வந்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Amir twist in BiggBoss5 money box அமீர் பிக்பாஸ்

People looking for online information on Amir, BiggBossTami5, Vijay tv will find this news story useful.