சுஷாந்த் மரணம் தற்கொலையாக தெரியவில்லை..?!! - ஆம்புலன்ஸ் பணியாளர் பரபரப்பு தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர் பரபரப்பை கிளப்பியுள்ளார். 

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங் மரணத்தில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ராபொர்த்தி என்பவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் மரணத்தில், அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் ட்ரைவர் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ''சுஷாந்த்தை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற போது, அவரது உடல் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதே போல அவரது கால்களும் வலைந்து காணப்பட்டது. மேலும் தற்கொலை செய்து கொண்டதின் அறிகுறியாக வாயில் நுரை ஏதும் காணப்படவில்லை. அவரது கழுத்தில் இருந்த மார்க் மீதும் சந்தேகம் உள்ளது'' என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த தகவல்கள் சுஷாந்த் சிங் மரணத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சுஷாந்த் மரணம் தற்கொலையாக தெரியவில்லை..?!! - ஆம்புலன்ஸ் பணியாளர் பரபரப்பு தகவல். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் சுஷாந்த் மரணத்தில் பகீர் தகவல் | Ambulance drivers shocks with details on sushant singh suicide

People looking for online information on Rhea Chakraborty, Sushant Ambulance, Sushant Singh Rajput, Sushant Suicide will find this news story useful.