“நான் LIMIT CROSS பண்றேனா?”.. பாவனியிடம் நேருக்கு நேராய் கேட்ட அமீர்! பாவனி பேசிய பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் பாவணி மற்றும் அமீர் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் தற்போதைய நாட்களில் பிரபலமாகி வருகின்றன.

Advertising
>
Advertising

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டு இருந்தனர். அந்த வகையில் பாவனியின் சகோதரி மற்றும் தாயார் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். அப்போது பாவனியின் சகோதரி அமீர் தம் கேம் விளையாடுவதாகவும், அதேபோல் பாவனி தன் கேமில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அதன் பின்னர் இது பற்றி அமீர் பாவனியிடம் கேட்கும்போது, “என் வீட்டார் என்ன சொன்னார்கள் என்பது முக்கியம் இல்லை. அதை விட நான் அதை மண்டையில் ஏற்றிக் கொள்கிறேனா என்பதுதான் முக்கியம்.” என்று பாவனி கூறினார். இதனையடுத்து பாவனியுடன் நடனமாடிய அமீர், அவரிடம் ப்ரொபோஸ் செய்தார். அப்போது அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அதற்கு மறுப்பு தெரிவித்த பாவனி, அவர்களின் உறவு நட்பாகவே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமீர், “இதை நீ சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறாய். அப்போ நான் சொல்வதையெல்லாம் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பாவனி, “ஆம், நீ எப்போதும் சீரியசாக தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய்... நான் அப்படித்தான் நினைத்தேன்” என்று தெரிவித்தார்.

அதன்பின்னர் தூங்குவதற்கு முன் இதுபற்றி அவரிடம் பேசிய பாவனி, தான் அமீரை அவ்வாறு புரிந்து வைத்ததற்கு மன்னிப்பும் கேட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அமீர் மற்றும் பாவனி இடையிலான உரையாடல் நிகழ்ந்தது. இந்த உரையாடலை அமீரிடம் பாவனி தொடங்குகிறார்.

அதில், பாவனி, “நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.. நாம் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதா?” என்று கேட்கிறார். அதற்கு அமீர், “ஏன் குழம்புகிறாய்? நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்று கேட்கிறார். அதற்கு பாவனி, “என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனக்கு அந்த மாதிரி ஒரு நண்பன் தேவை இல்லை. நீ எப்போதும் ஒரு ஃபீலிங் கொடுக்கிறாய்” என்று கூற, மீண்டும் அமீர், “நான் உன்னை என்னடி செஞ்சேன்? நான் அப்படி பேசுவது உனக்கு கஷ்டமாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

பின்னர் பாவனி, “அது இல்லை நீ இதை ஒரு ஸ்டேட்ரஜியாக பண்ணுகிறாய் என்று சொல்கிறார்கள். அது எனக்கு கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல இதற்கு அமீர், ‘இல்லை .. நைட் பேசலாம் ’என்றார். இதற்கு கொஞ்சம் பவானி அப்செட் ஆகிறார். பின்னர், “வேண்டாம் பேசியது போதும்” என்கிறார்.

அதற்கு அமீர், “என்னடி எது சொன்னாலும் தப்பா புரிஞ்சுகிட்டா என்ன செய்ய? நாம் பேசினால் அதை வைத்து எதையாவது விளையாடுபவர்கள். அதனால்தான் இரவு பேசலாம் என்று கூறினேன். வேறு ஏதும் இல்லை!” என்று கூறினார். பின்னர் பாவனி, “நீ மாறி விட்டாய்” என்று சொல்ல, அதற்கு அமீர், “உன்னை பார்த்து நான்காவது, ஐந்தாவது நாள் முதல் இன்றுவரை நான் ஒரே மாதிரிதான் பிஹேவ் பண்ணுகிறேன். வேறு ஏதும் மாற்றம் இருந்தால் கண்டிப்பாக சொல்!” என்று கேட்கிறார்.

அதற்கு பாவனி எந்த மாற்றமும் இல்லை என்று கூறுகிறார். பிறகு , “நான் என்ன லிமிட் கிராஸ் பண்ணுகிறேனா? டூ மச்சா பண்ணுகிறேனா?” என்று கேட்கும் அமீர், “நேற்று நீ செய்ததால் நான் அப்செட் ஆயிட்டேன்!” என்று கூறுகிறார். அதற்கு பாவனி, “நீ என்னை மன்னித்துவிடு.. நான் எப்போதும் சொல்வது போல் தான் சொன்னேன்.. அதை நான் கோபமாக சொல்லவில்லை” என்று விளக்கம் அளித்தார். இதன் பின், அமீர் நோ ப்ராப்ளம் என்கிறார். மேலும், “இனி எதுவுமே இல்லை!” என்று பாவனி தெரிவிக்கிறார். இப்படியாக அவர்களின் உரையாடல் நடந்திருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Am i crossing limits ami asked to pavani biggbsstamil5

People looking for online information on Amir pavani, BiggBoss5, Biggboss5tamil, BiggBossTamil5, Pavani amir will find this news story useful.