INIYA : ‘தாலி கட்டுறப்போ போடும் 3 முடிச்சுக்கு அர்த்தம்’.. புதுப்பொண்ணு ‘இனியா’ சொன்ன விளக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இனியா. இந்த சீரியலில் ஆல்யா மானசா மற்றும் ரிஷி முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | The Elephant Whisperers : நீலகிரி டூ ஆஸ்கார் பயணம்..! ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்..

நடிகை ஆல்யா மானசா, ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் நடித்தார். இந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கியது. இதிலும் ஆல்யா மானசா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பம் தரித்ததால் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார்.

பின்னர் மீண்டும் புதுப்பொலிவுடன் சன் டிவியில் வந்த இனியா சீரியலில் நடிகை ஆல்யா மானசா நாயகியாக நடிக்க தொடங்கினார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது நாயகி இனியா மற்றும் நாயகன் விக்ரம் இருவருக்கும் இடையிலான திருமண காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன. 

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் தான் இந்த திருமணத்தில் மூன்று முடிச்சுகள் போடுவதற்கான அர்த்தம் குறித்து ஆல்யா மானசா விளக்கிய வீடியோ ஒன்றை ஆலியா மானசா தம்முடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பகிர்ந்து இருக்கிறார்.

முன்னதாக ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய குட்டி ரவுடியை விக்ரம் கைது செய்ததால், திருமணத்துக்கு முதல் நாள் இனியாவை கடத்தினார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் எப்படியோ இனியாவை மீட்டார் விக்ரம். பின்னர் விக்ரமுக்கும் இனியாவுக்கும் திருமணம் ஆகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இடம் பெறும் ஒரு காட்சியில் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்ட கூடிய அந்த சடங்குக்கு விளக்கம் சொல்கிறார் ஆல்யா மானசா.

Images are subject to © copyright to their respective owners.

அதில், “முதல் முடிச்சு திருமணமாகும் இருவருக்கும் இடையிலானது, ஒருவர் இன்னொருவருக்கு கட்டுப்படுபவர் என்பதை குறிக்கும்” என்று கூறினார். இதேபோல், “இரண்டாவது முடிச்சு பிறந்த வீட்டை விட்டு புகுந்து வீட்டுக்கு வந்து புகுந்த வீட்டை தன் வீட்டாக ஏற்றுக் கொண்டாலும் பிறந்த வீட்டை மறந்து விடக்கூடாது என்பதற்காக தான்” என்றும் , “மூன்றாவது முடிச்சு என்பது கணவருடைய குடும்பத்தில் கொழுந்தனார், நாத்தனார்களையும் தன் குடும்பத்தினராக பாவித்து ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வர வேண்டும் என்பதற்காக போடப்படுகிறது” என்றும் இனியா கேரக்டரில் ஆல்யா மானசா விளக்கமளித்திருக்கிறார். இந்த சீரியலில் இடம்பெறக்கூடிய இந்த காட்சியை தம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் ஆல்யா மானசா.

Also Read | Pandian Stores : பொங்கி எழுந்த ஜீவா.. அண்ணன் மூர்த்தியிடம் அடுக்கிய கேள்விகள்! உடைகிறதா குடும்பம்?

தொடர்புடைய இணைப்புகள்

Alya manasa Explanation for marriage rituals Iniya Serial Update

People looking for online information on Alya Manasa, Iniya, Iniya Serial today Episode, Serial Update will find this news story useful.