VIDEO -குழந்தை பிறந்தபோது கண்கலங்கிய ஆல்யா மானசா... கணவருடன் எமோஷனல் தருணம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியலின் போது காதல் வயப்பட்ட இருவரும் பின்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த சின்னத்திரை ரியல் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சஞ்சீவ் கார்த்திக் காற்றின் மொழி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்த நிலையில் ஆல்யா மானஸாவின் அடுத்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதன் பிறகு ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் மீண்டும் விஜய் டிவியின் ராஜா ராணி 2 என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர். நடிகை ஆல்யா மானசா குழந்தையின் அழகான புகைப்படம் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அதிலும் பார்க்க அச்சுஅசலாக ஆல்யா மானசா போலவே குழந்தையும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலிலும், நடிகை ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலிலும் பிசியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த தம்பதியினர் குழந்தையின் முதலாம் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினர்.  இந்நிலையில் மகள் பிறந்த பொழுது முதன் முறையாக தனது கைகளில் வாங்கிய சஞ்ஜீவின் எமோஷனல் தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இதுவரை யாரும் பார்த்திராத இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

VIDEO -குழந்தை பிறந்தபோது கண்கலங்கிய ஆல்யா மானசா... கணவருடன் எமோஷனல் தருணம்...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Alya manasa emotional moments video குழந்தை பிறந்தபோது கண்கலங்கிய ஆல்யா

People looking for online information on Alya Manasa will find this news story useful.