"ரஜினி, கமல் கூட தனித்தனியா ஒரு படம், அடுத்ததா" பிரபல இயக்குனர் போட்ட COMMENT.. 'FB' பத்திக்கிச்சு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அதன் வெற்றிக்கு பிறகு, நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம், 'விக்ரம்'.

Advertising
>
Advertising

ALso Read | Behindwoods விருது மேடையில் லோகேஷ் கொடுத்த Thalapathy67 அப்டேட்.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் நடந்துச்சு..

வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி அன்று விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நாள், படத்திலுள்ள பாடல்களும் வெளியாகி, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆகவும் அமைந்திருந்தது.

அல்போன்ஸ் புத்ரன் பகிர்ந்த லிரிக் வீடியோ

இதனையடுத்து, விக்ரம் படத்தில் வரும் "போர் கண்ட சிங்கம்" என்னும் பாடலின் லிரிக் வீடியோவும் இன்று (25.05.2022) காலை வெளியாகியிருந்தது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், இந்த லிரிக் வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சிறப்பான பாடல் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்த நிலையில், ரசிகர் ஒருவர் இதன்கீழ் செய்த கமெண்ட்டும், அதற்கு அல்போன்ஸ் புத்ரன் கொடுத்த பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ரசிகர் கேட்ட கேள்வி

பொதுவாக, அல்போன்ஸ் புத்ரன் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு வெளிப்படையாக பதில்களை கமெண்ட்டிலேயே கூறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது அவரிடம் ரசிகர் ஒருவர், "ரஜினிகாந்த் திரைப்படத்தை தற்போது மீண்டும் தொடங்குவதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், "நான் ரஜினி சார் அல்லது கமல் சாரை நேரில் சந்தித்தால், என்னிடம் இருக்கும் ஸ்கிரிப்ட் மீது அவர்கள் இருவருக்கும் அதிக ஆர்வம் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் அகராதியில் எனது பெயர் இல்லை என்று நான் நம்புகிறேன். அதனால், என் வாழ்நாளில் இதுவரை அவர்கள் இருவரையும் நான் சந்தித்ததே இல்லை.

ரஜினி, கமல் ரெண்டு பேரு கூட..

எதிர்காலத்தில் அதிர்ஷ்டமும் எனக்கு கைகூடி நான் அவர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்கு எனது ஸ்க்ரிப்ட்டும் பிடித்திருந்தால், என்னுடைய அனைத்து விதமான திறமைகளையும் பயன்படுத்தி, ஒவ்வொருவருடனும் சிறந்த ஒரு பொழுதுபோக்கு படத்தை இயக்குவேன். அதேபோல, பின்னர் இருவரையும் வைத்து நல்ல ஒரு பொழுதுபோக்கு படத்தையும் நான் இயக்குவேன் " என அல்போன்ஸ் புத்ரன் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகரின் கேள்விக்கு அல்போன்ஸ் புத்ரன் அளித்துள்ள பதில், தற்போது ரசிகர் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. நேரம் மற்றும் பிரேமம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள அல்போன்ஸ் புத்ரன், அடுத்ததாக நடிகர் பிருத்விராஜ் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரை வைத்து, 'கோல்டு' என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "என்ன படக்குன்னு ஓகே சொல்லிட்டாரு" அடம்பிடித்த ராதிகா.. சம்மதித்த கோபி.. "இனி என்ன ஆகுமோ?"

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren about directing kamal and rajini

People looking for online information on Alphonse Puthren, Kamal Haasan, Rajinikanth will find this news story useful.