சமந்தாவின், " ஓ சொல்றியா மாமா" பாட்டுக்கு எத்தனை மீம்ஸ் பா சாமி! சந்தோஷப்பட்ட அல்லு அர்ஜுன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தெலுங்கில் "ஆர்யா" படத்தின் மூலம் பிரபலமானவர். அதன்பின் நிறைய படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த "புஷ்பா" படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

 


சமீபத்தில் புஷ்பா படத்தின் வெற்றி விழாவில்  பங்கேற்ற அல்லு அர்ஜுன், ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்களை பகிர்ந்தார். அதில் அவர் நான் இன்று தமிழில் தான் பேச போகிறேன், அது தவறாக இருந்தாலும் பரவாயில்லை, தமிழில் தவறு இருந்தால் அழகாய் இருக்கும் எனவும் கூறினார். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இங்கு என் படம் இவ்வளவு வரவேற்பை பெரும் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. தமிழ் சினிமாவிற்கும் தமிழ் ஆடியன்ஸுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பாடகி ராஜலட்சுமி மற்றும் ஆண்ட்ரியா அதன்பின் படத்தின் தமிழ் வசனம் எழுதிய மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியர் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் மைதிலி மற்றும் படத்தை வெளியிட்ட Lyca productions-கும் நன்றி கூறினார்.

இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கவும், இந்த படத்தை மிகவும் பிரபலமாக்கியது எனது நண்பர் தேவிஸ்ரீபிரசாத் தான்.  அவர் தான் என்னை தமிழ் சினிமாவில் எப்படியாவது நிறைய படங்கள் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதாகவும் கூறினார். அதன்பின் படத்தில் இடம்பெற்றுள்ள "சாமி சாமி"  என்ற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இந்த பாடல் அருமையாக இருக்கிறது என எனக்கு மெசேஜ் அனுப்புவதாகவும் சிரித்துக்கொண்டே கூறினார்.

அதன்பின் சமந்தாவின் "ஓ சொல்றியா மாமா " என்ற பாடலுக்கு எத்தனை மீம்ஸ் டா, என கூறி அது வெறும் மீம்ஸ்கள் அல்ல எனது சந்தோசம் என்று கூறினார். மேலும் படத்தின் தன்னுடைய நடித்தவர்களான ராஷ்மிகா, சென்னை பொண்ணு நம்ம பொண்ணு எனக்கூறி சமந்தாவுக்கும், படத்தின் வில்லனாக நடித்த பகத் பாஸில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

கடைசியாக படத்தின் இயக்குனர் சுகுமாருக்கு நன்றியை தெரிவித்ததுடன், என்னுடைய சினிமா வளர்ச்சிக்கு "ஆர்யா" படம் மிக முக்கியமானது. அதுவரையில் நான் ஒரு சாதாரண நடிகர், அந்த படம் தான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஆகும். ஆர்யா 2 படத்திற்கு பின்னர் பத்து வருடங்கள் கழித்து தற்போது "புஷ்பா" படத்தின் மூலம் இணைந்துள்ளோம் என நெகிழ்ச்சியாக கூறினார்.

 

சமந்தாவின், " ஓ சொல்றியா மாமா" பாட்டுக்கு எத்தனை மீம்ஸ் பா சாமி! சந்தோஷப்பட்ட அல்லு அர்ஜுன்! வீடியோ

Allu Arjun Excited about Pushpa movie victory

People looking for online information on AlluArjun, OhSolriyaMama, Pushpa, RashmikaMandanna will find this news story useful.