150 நாட்களுக்கு பிறகு., ஷூட்டிங்கை தொடங்கும் முதல் திரைப்படம்.! - பிரபல ஹீரோ வெளியிட்ட வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் லாக்டவுனில் முதல் சினிமா படப்பிடிப்பை தொடங்குவது பற்றி பிரபல ஹீரோ வீடியோ வெளியிட்டுள்ளார். 

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் எதிரொலியையடுத்து, திரையங்கங்கள் மூடப்பட்டன. மேலும் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து சீரியல் படப்பிடிப்புகளுக்கு மட்டும், விதிகளை பின்பற்றி நடத்தி கொள்ள அரசு அனுமதியளித்தது. 

இந்நிலையில் தற்போது அரசின் விதிமுறைகளுடன் தொடங்கப்படும் முதல் சினிமா ஷூட்டிங் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஞ்சித் திவாரி நடிப்பில் அக்‌ஷய் குமார் நடிக்கும் திரைப்படம் பெல்பாட்டம். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸானது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணத்தால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த படக்குழு, இப்போது லண்டனின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறார்களாம். அரசாங்க விதிகளை பின்பற்றி முறையான பாதுகாப்புடன் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் ஹூமா குரேஷி, லாரா டட்டா, வாணி கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

 

ஷூட்டிங்கை தொடங்கும் முதல் படம் | Akshay kumars bellbottom to start shooting releases video

People looking for online information on Akshay Kumar, Bellbottom, Covid19, Huma Qureshi, Shooting will find this news story useful.