"விருப்பம் இல்ல.. வெளில போறேன் பிக்பாஸ்".. "இத தான் நானும் சொல்றேன்!".. அடுத்து நிரூப் VS அக்‌ஷராவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க், எலிமினேஷன் என களைகட்டும் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.

Advertising
>
Advertising

அந்த வகையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அண்மையில் காயின் டாஸ்க் என்றொரு டாஸ்க் நடந்தது. அதில் போட்டியாளர்கள் நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் அடிப்படையிலான ஆற்றல்கள் பெற்ற நாணயங்களை கைப்பற்றும் போட்டி நடந்தது. இதனைத் தொடர்ந்து நெருப்பு ஆற்றலுக்கான நாணயத்தை வைத்து இருந்த இசைவாணிக்கு கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கிச்சன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

அதே சமயத்தில் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தார். ஆனாலும் ஆளுமைகளை இசைவாணி தான் செலுத்தினார் என்று மதுமிதா இந்த வாரம் கமல்ஹாசனிடம் தெரிவித்திருந்தார். இதனிடையே சின்ன பொண்ணு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுவரை நமீதா மாரிமுத்து தவிர நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு ஆகிய 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நிரூப், நில ஆற்றலுக்கான டாஸ்க் அதிபதியாக பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார். அவருக்கு பெட்ரூம் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பெட்ரூமுக்குள் யார் எப்போது வரவேண்டும்.. ஒவ்வொரு நாளும் பெட்ரூமுக்குள் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டாத 5 போட்டியாளர்கள் யார் யார் என்பதெல்லாம் தீர்மானிக்கலாம்.

இதேபோல் நிரூப், தனக்காக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம். ஹவுஸ்மேட்ஸ் எதையாவது பேச வேண்டும் என்றால் அந்த உதவியாளருடன் பேசி அனுமதி பெற்ற பிறகே நிரூப்பிடம் பேச வேண்டும். காலையில் எழுந்து நிரூப் இருக்கும் இடம் தேடி அவருக்கு தேவையான உணவு வர வேண்டும் உள்ளிட்ட பல கட்டளைகளை அவர் இட முடியும். அதையெல்லாம் யார் செய்ய வேண்டும் என்பதை அவர் தன்னுடைய உதவியாளர் மூலமாகவே நியமிப்பார். ஆணையிடுவார் என்றெல்லாம் பிக்பாஸ் விதிமுறைகளை போட்டுவிட்டார்.

இந்த நிலையில் அப்படியான உதவியாளர் ஒரு பெண் போட்டியாளராக தான் இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறி இருந்தார். இதையடுத்து நிரூப் அக்ஷராவை தேர்வு செய்தார். அக்ஷராவோ, “நீங்கள் என்னை தான் தேர்வு செய்வீர்கள் என்று நினைத்தேன். நிச்சயமாக நான் ஏற்க மாட்டேன். அப்படி இல்லையென்றால் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் பிக்பாஸ். இல்லை வேறு ஏதேனும் தண்டனை கொடுங்கள் நான் ஏற்கிறேன்.” என்று அக்ஷரா உறுதியாக கூறிவிட்டார்.

அப்போது பதில் பேசிய நிரூஇ, “இதைத்தான் பிக்பாஸ் நானும் வந்த நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் அவளை வீட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார். அதன் பின்னும் பிக்பாஸ் நிரூப்பின் முடிவே இறுதியானது என்று கூறிவிட்டதால், நிரூப், அக்ஷராதான் தன் உதவியாளர் என்பதில் தீர்மானமாக இருந்தார்.

அக்ஷரா மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் இடையில் சுமூக உறவு ஏற்படுமா என்பது இந்த வாரத்தில் தெரியும். இதனிடையே வைக்கப்பட்ட இன்னொரு போட்டியில் ராஜூ வெற்றிபெற, இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ராஜூ இருக்கிறார்.

கடந்த முறை இசைவாணிக்கும் மதுமிதாவுக்கும் இடையே எழுந்த உரசல் இந்த மாதிரி இம்முறை நிரூப் மற்றும் ராஜூ இருவருக்கும் இடையே எழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

Akshara becomes niroops assistant biggbosstamil5

People looking for online information on Akshara, BiggBossTamil5, Niroop, Raju will find this news story useful.