"என்ன வார்த்தை பேசுறான்!".. ஆக்ரோஷமாக கத்தி, கோபத்தில் பொம்மையை தூக்கி அடித்த அக்‌ஷரா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அடுத்தடுத்த டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

அந்த வகையில் தற்போது போட்டியாளர்களின் பெயர்கள் குறிக்கப்பட்ட பொம்மைகளை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்கு போட்டியாளர்கள் ஓடக்கூடிய புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் பெயரில் அல்லாமல் வேறு பெயரில் இருக்கும் பொம்மையை எடுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் ஓடவேண்டும். அப்படி தாங்கள் எடுத்துச் செல்லும் பொம்மையில் உள்ள பெயருக்குரிய போட்டியாளர் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து எலிமினேட் ஆகாமல் காப்பாற்றப்படுவார்.

ஆனால், பொம்மையுடன் ஓடிவந்து, கடைசியாக கூடாரத்துக்குள் நுழையக் கூடிய சூழ்நிலையில் இருப்பவர்களின் கையில் எந்த பொம்மை இருக்கிறதோ, அந்த பொம்மையில் யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர்கள் இந்த லக்ஜூரி பட்ஜெட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். அவ்வாறு ஒரு போட்டியாளர், குறிப்பிட்ட ஒரு போட்டியாளரின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்து செல்லும் போது சக போட்டியாளர்கள் அதை தடுத்து அவர்களை வெளியே நிறுத்தவும் செய்கின்றனர். அல்லது அவர்களை தள்ளி, கூடாரத்துக்கு உள்ளே அனுப்பவும் செய்கின்றனர்.

அப்படி நிரூப், அக்‌ஷராவை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், அக்‌ஷரா  நகர முடியாமல் தவித்திருக்கிறார். இதனால் வருண், ஆத்திரமாக நிரூப்பிடம் சண்டை போடத் தொடங்கி விட்டார். இதனால் அடுத்த ரவுண்டில் நிரூப்பை வருண் பழிதீர்க்க, நிரூப்பும் வருணுக்கு ஈடுகொடுக்க, இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.

இதனை தொடர்ந்து இறுதிப் பேச்சு வார்த்தையின் போது இதுகுறித்த தன் பார்வையை சற்று மோசமாக அக்‌ஷராவிடம், அனைவர் முன்னிலையிலும் சிபி முன்வைத்தார். இடையில் அவர் விட்ட வார்த்தை சற்று அநாகரீகமான வார்த்தை என தெரியவந்தது. உடனே கொந்தளித்த அக்‌ஷரா,  “எப்படி அந்த வார்த்தையை பேசலாம்? என்ன வார்த்தை பேசுகிறான்?” என்று ஆக்ரோஷமாக கத்தி தன் கையில் இருந்த பொம்மையை தூக்கி அடித்தார்.

மேலும் பின்னால் இருந்த கப்போர்டில் தன் கையால் ஓங்கி அடித்துக் கொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் அக்‌ஷரா இவ்வளவு கோபப்பட்டு இப்போதுதான் முதல் முறையாக பார்ப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். முன்னதாக செண்பகமே செண்பகமே டாஸ்கின் முடிவில் அக்‌ஷராவுக்கும் சிபிக்கும் இடையே போர் மூண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Akshara angry shout at the word spoken by Ciby biggbosstamil5

People looking for online information on Akshara, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Imman Annachi, Niroop, Niroop Nandakumar, Varun will find this news story useful.