"அஜித் - ஷாலினி ரொம்ப ROMANTIC".. "விக்ரம்-ஐ பாத்தா இதை கேட்பேன்" - மனம் திறந்த பிரியங்கா உபேந்த்ரா! VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்துடன்  ‘ராஜா’, விக்ரமுடன் ‘காதல் சடுகுடு’, விஜயகாந்துடன் ‘ராஜ்ஜியம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர், நடிகை பிரியங்கா உபேந்த்ரா.
இவர் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அஜித், ஷாலினி, விக்ரம், வடிவேலு உள்ளிட்டோர் பற்றி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசும்போது, “நான் சொல்வது சரியாக இருந்தால், அஜித்குமார் அவர்கள் ரெட் திரைப்படத்துக்கு பிறகு ராஜா திரைப்படத்தில் நடித்தார். அவர் அதிக ஒத்துழைப்பு தருபவர். என் கேரக்டருக்கு நிறைய உதவினார். ஆனால் அதிகம் பேச மாட்டார்.

அந்த நேரத்தில் அஜித்துக்கும் ஷாலினிக்கும் திருமணமாகி சில காலம் தான் ஆனது.  ராஜா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாலினியை சந்தித்தேன். அவர் அஜித் அவர்களை நன்றாகவே கவனித்துகொண்டார். இருவரும் ரொம்பவே ரொமாண்டிக்கான கப்பிள் என்பது அப்போது தெரிந்தது.

நடிகர் வடிவேலுடன் பணிபுரியும் போது சிரித்துக் கொண்டே தான் இருந்தாக வேண்டும். அவ்வளவு பவர்ஃபுல் பாக்ஸ் ஆஃப் டேலண்ட் அவர். விவேக் சார் மாதிரியே வடிவேல் சாரையும் நான் மிகவும் மதித்து, அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

விக்ரம் சாருடன் நான் காதல் சடுகுடு படத்தில் நடித்தேன். அவரை பார்த்தால் நிச்சயமாக எப்படி தன் தலைமுடியை மெயிண்டெயின் பண்ணுகிறார் என்று கேட்பேன். ஒவ்வொரு படத்திலும் ஸ்டைலாகவும், புதுப்புது தோற்றங்களுடன் ஹேர் ஸ்டைல் பண்ணுகிறார். ஆனால் எப்படி பராமரிக்கிறார் என்பது குறித்து கேட்க வேண்டும் அவரிடம்.

எனக்கு தமிழ் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். நான் எங்கு சென்றாலும் தமிழ் ஆடியன்ஸ் என்னை ராஜா படத்தில் வரும் தயிர் சாதம் எனும் அந்த கேரக்டரை நினைவில் வைத்துள்ளார்கள்.” என்று சிலாகித்துள்ளார். மேலும் பல விஷயங்களை ஜாலியாக பேசியுள்ள பிரியங்கா உபேந்த்ராவின் முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.

"அஜித் - ஷாலினி ரொம்ப ROMANTIC".. "விக்ரம்-ஐ பாத்தா இதை கேட்பேன்" - மனம் திறந்த பிரியங்கா உபேந்த்ரா! VIDEO! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith vikram movie heroine Priyanka Upendra exclusive interview

People looking for online information on Ajith Kumar, Priyanka Upendra, Shalini will find this news story useful.