மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள்.. தங்கப் பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

Advertising
>
Advertising

மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ஆயுதப்படை ரிசர்வ் கேம்பஸில் கடந்த  (26.07.2022) அன்று துவங்கியது.

திருச்சி மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு வரும் முன் நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ அப்போது வெளியாகி வைரலானது.

பின்னர் அடுத்த நாள் போட்டிகளில் பங்கேற்க நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டிகள் முடிந்ததும் அன்றிரவு நடிகர் அஜித் குமார்  சென்னை திரும்பினார்.

இந்த துப்பாக்கி சுடும் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.


.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைகிறது. இச்சூழலில் இந்த வெற்றி அறிவிப்பு அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar won Gold Bronze Medals in State Rifle Tournament

People looking for online information on Ajith Kumar will find this news story useful.