"அஜித் சொக்கத்தங்கம்".. அஜித்தை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கிய ரசிகையின் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ராணுவ ரிசர்வ் கேம்பஸில்  திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில்  (26.07.2022) அன்று நடந்தது.

Advertising
>
Advertising

Also Read | PONNIYIN SELVAN PS1 படத்தின் 2வது சிங்கிள்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆதித்த கரிகாலனின் வெற்றிக் கீர்த்தனை!

இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டார். அந்த போடடிகளில் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை பிரபல துப்பாக்கி சுடும் வீராங்கனை மேக்னா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு நாள் இருக்கும், அது உங்கள் வாழ்நாள் தருணமாக இருக்கும்... அந்த தருணத்தில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மகிழ்ச்சியையும் பெறுவீர்கள், அது கடவுளின் ஆசீர்வாதத்தைத் தவிர வேறில்லை, இது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரு அடையாளம்.. இது உங்கள் நாள்.

இதோ என் நாள், நேற்று 18.8.2022 என் வாழ்க்கையின் சந்தோஷம், என் இலக்கு, என் உத்வேகம், என்னுடைய எல்லாமே எனக்கு அஜீத் தான்.

நான் அவரைச் சந்தித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நேற்றிலிருந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், ஒரு நாள் அவரை சந்திப்பேன் என்ற கனவு எப்பொழுதும் இருந்தன, இப்போதும் அதையே உணர்கிறேன்.

இந்த தருணத்தில் யாராவது என்னைக் குத்தாத வரை என்னால் அதிலிருந்து வெளியே வர முடியாது.

"யாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் அஜித்தை சந்தித்தேன்". இது நடந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்,  வாழ்நாளில் நான் அவரை சந்திப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஏனென்றால் அவரை சந்திப்பது எளிதானது அல்ல.

என்னுடைய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்தால், அவர் ஒரு சொக்கத்தங்கம்... பங்காரம் !! அவரது ஒவ்வொரு அங்குலமும் பணிவு, பொறுமை, எளிமை, பச்சாதாபம் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. அவர் எப்போதும் மிகவும் இனிமையான மற்றும் அமைதியான முகம் கொண்டவர், அவர் தனது கனிவான ஆளுமை மற்றும் வரவேற்கும் புன்னகையால் என்னை ஆச்சரியப்படுத்தினார்.

குறிப்பாகச் சொல்வதானால், அவர் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார்,  எங்களை புகைப்படத்திற்காக காத்திருக்க வைத்திருக்காக. அவர் தனது மேலாளரை அழைத்து நாங்கள் காத்திருக்க ஒரு இடத்தை ஏற்பாடு செய்தார். மேலும் அவர் 3 முறை மன்னிப்பு கேட்டார்... தென்னிந்தியாவின் ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர் எங்களை காத்திருக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறார் ??? என் மனம் துடித்தது...

அவரை சந்திப்பதற்கு முன், உடன் வந்த என் ஃப்ரெண்ட் என்னிடம் கேட்டார்.. ஏன் இவரை உங்களுக்கு இவ்வளவு பிடிக்கும்?.. அவரைச் சந்தித்த பிறகு, என்னுடன் வந்தவர் அவரது ரசிகராக மாறி, திரும்பும் வழியில் அஜித்தைப் பற்றி 2 மணி நேரம் பேசினார். .. அதுதான் ஏ.கே.யின் மந்திரம்.

அஜித் மிகவும் அழகாக இருக்கிறார்... சந்திரனைப் போல பிரகாசமாக இருக்கிறார்

ஆக.. ஆகஸ்ட் 18ம் தேதியை என் வாழ்வில் மகிழ்ச்சியான நாளாக அறிவிக்கிறேன்... இது ஒவ்வொரு வருடமும். வாழு வாழ விடு... என்றென்றும் உங்கள் ரசிகை மேக்னா ரகுபத்ருணி" என கூறியுள்ளார்.

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

Also Read | பிரபல முன்னணி தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் 'பீஸ்ட்'.. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK meet a fan and sign a Autograph

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Fans, Ajith Kumar meet fans will find this news story useful.