”கடைசியா எப்ப அத செஞ்சீங்க, ஞாபகம் இருக்கா?” ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டேட்டஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரின் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

சூப்பர் சிங்கரில் மா.கா.பா & மைனா நந்தினி மிஸ்ஸிங்.. பிரியங்காவுடன் களமிறிங்கிய CWC பிரபலம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது முசாபீர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளார். நாளை அந்த ஆல்பம் வெளியாக உள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு அவர் மகளிர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

ராகவா லாரன்ஸோடு சந்திப்பு

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸை சந்தித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ‘verified… லாரன்ஸ் அண்ணாவுடனான சந்திப்புக்குப் பிறகு என் மூளை துடிக்கிறது. Workmode on #எங்கேயும் #எப்போதும் #என்னவாக இருந்தாலும்’ எனக் கூறியிருந்தார். இந்த புகைப்படம் மற்றும் அவரின் கருத்துகளை வைத்து பார்க்கும் போது விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவு

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் செய்தித்தாள் படிக்கும் அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதனுடன் ‘காலையிலேயே வரும்  செய்தித்தாளை கையில் காபியோடு கடைசியாக எப்போது படித்தீர்கள்?...கடந்த சில வருடங்கள் நம் வாழ்க்கையை மிகவும் மாற்றி விட்டது.. லேண்ட்லைன்கள், சிடி பிளேயர்கள், டேப் ரெக்கார்டர்கள், பெரிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், டிவிடி ப்ளேயர்கள் எல்லாம் மறைந்துவிட்டன.(என் பையன்களிடம் இதைப் பற்றி பேசினால், அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியாது.).

செய்தி தாள் எல்லாம் இப்போதே பழங்காலத்து கதையாகிவிட்டது. காலம் மாறும்போது நம்மை சுற்றி இருப்பவைகளும் மாறதான் செய்யும். ஆனால் இப்போதோ எல்லாம் மிக வேகமாக நடக்கிறது. இந்த கணத்தில் வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். அன்பும் மகிழ்ச்சியுமே முக்கியம்.  உலகம் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டு இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

நடிகர் பரத்தின் 50-வது படம்.. மீண்டும் ஜோடி சேர்ந்த நடிகை வாணி போஜன்! செம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth shared a super status in instagram

People looking for online information on Aishwarya, Aishwarya Rajinikanth, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், Director Aishwarya Rajinikanth will find this news story useful.