”உங்க 2 பேரையும் கொடுத்த கடவுளுக்கு..” – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் EMOTIONAL பதிவு! “

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உணர்ச்சிகரமான பதிவை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising


தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு முடிவு…

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதன் பிறகு அவர் இயக்கியுள்ள பயணி ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி…

இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். அதன் பின்னர் மீண்டும் அவர் உடல்நலப் பாதிப்புக் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்தபடியே பயணி ஆல்பத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட பயணி ஆல்பம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இந்த பாடலை ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டது போல மலையாள வெர்ஷனை மோகன்லால் மற்றும் தெலுங்கு வெர்ஷனை அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர், இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 'பயணி'யை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், "உங்கள் மியூசிக் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் ஃப்ரண்ட். கடவுள் அருள் புரியட்டும்" என தன்னுடைய ட்வீட்டில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் இந்த வாழ்த்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றியை தெரிவித்திருந்தார். அவர்களின் இந்த டிவீட்கள் வைரலாகின.

மகன்களின் அன்பு முத்தம்…

இந்நிலையில் தற்போது தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரோவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்தோடு  ’நீங்கள் இருவரும் வயிற்றில் இருக்கும்போதே என்னை உதைத்தீர்கள்.. இப்போது நீங்கள் அனைவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதில் அளவிலாத மகிழ்ச்சி.. அன்பான இப்படிப்பட்ட பிள்ளைகளை கொடுத்ததற்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்… அந்த நன்றிக்கு நான் திருப்பி செலுத்தும் ஒரே வழி பிரார்த்தனைதான். இது நம்மால் அளவிட முடியாத அன்பு. ஆனால் உன்னை வளர்த்து, நீ வளர்ந்து பெரியவர்களை பார்ப்பது வாழ்நாள் சந்தோஷம்’ எனக் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகம்…

இன்று காலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாவதை அறிவித்திருந்தார். ஓ சாத்தி சால் என்ற படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காதல் கதை என்று அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth emotional status about her sons

People looking for online information on Dhanush, Rajinikanth will find this news story useful.