BREAKING UPDATE: வடசென்னை படத்துக்கு பிறகு "மாறன்" தனுசுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர் இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனரும் நடிகருமான அமீர் சுல்தான் நடிப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே அமீர், தனுஷ் தயாரித்து  நடித்த வட சென்னை படத்தில்  ராஜன் எனும் புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே வடசென்னை படத்துக்கு பிறகு "மாறன்" தனுசுடன் மீண்டும் அமீர் இணைகிறார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.  இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.

Tags : Dhanush, Ameer

தொடர்புடைய இணைப்புகள்

After vadachennai famous actor again joined with dhanush

People looking for online information on Ameer, Dhanush will find this news story useful.