சூப்பரோ சூப்பர்!! சிம்புவைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் மாஸ் நடிகர்? பரபரப்பு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் மற்றும் சிம்பு இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம், கடந்த 2010 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில்தான் கௌதம் மேனன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் புதிய திரைப்படம் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த திரைப்படத்தில் கௌதம் மேனன் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாகவும், இந்த திரைப்படத்தை ஃவேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடிகர் சூர்யா நடிப்பில், மணிரத்தினம் - ஜெயேந்திரா பஞ்சாபிசேகன் தயாரிப்பில் உருவான நவரசா தொகுப்பில் ‘கிட்டார் கம்பி மேலே’ நின்று என்கிற திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி அண்மையில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

After Silambarasan TR Gautham Menon to direct sivakrthikeyan

People looking for online information on Gautham Menon, Silambarasan TR, Sivakarthikeyan, VenthuThaninthathuKaadu will find this news story useful.