"இன்னொரு தடவை நீ இத சொன்ன.." .. அபிஷேக்கிற்கு வார்னிங் கொடுக்கும் ராஜூ! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் கதைசொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இந்த டாஸ்கில் அக்ஷரா, தன்னுடைய கதையை கூறியிருந்தார். சொகுசான வீட்டுப் பெண்ணாக பிறந்து வளர்ந்த அக்ஷரா தந்தையின் மரணம் மிகவும் பாதித்ததாக கூறியிருந்தார். மேலும் தன்னுடைய அண்ணன் தன்னுடைய தந்தையின் இழப்பை மறக்கும் அளவுக்கு தங்களைப் பார்த்து கொண்டதாகவும் பேசிய அக்‌ஷரா தன்னுடைய இலக்கான மாடலிங் துறையில் சாதித்து, அதை இந்தியா முழுவதும் பிரபலப் படுத்துவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த கதையை கேட்டு பிரியங்கா, “இந்தக் கதையில் நீ என்ன செய்தாய் என்பது இல்லை. எனவே உனக்கான வளர்ச்சியை நோக்கி நீ செயல்பாடுகளை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இந்த கதைக்கு பிரியங்கா டிஸ்லைக் போட்டிருந்தார். இதேபோல் ராஜூ அக்ஷராவுக்கு லைக் போட்டு இருந்தார்.

ஆனால் பிரியங்கா, சொன்ன விளக்கத்தை பார்த்துவிட்டு அக்ஷராவை தனியே அழைத்து பேசிய ராஜூ, “நானும் மற்றவர்கள் போல் டிஸ்லைக் செய்தால் உன் மனசு கஷ்டப்படும் என்றுதான் லைக் போட்டேன். மற்றபடி உன் கதை ஃப்ளாட்டாக இருந்தது. அதில் எந்தவிதமான மேடுபள்ளமும் இல்லை என்பது தான் உண்மை!” என்று கூற, “சரி பரவாயில்லை.. நீ குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம்” என்று சொல்லி சமாதானப் படுத்தி விட்ட அக்‌ஷரா, இந்தப்பக்கம் வந்து தனியாக அழுதார்.

அதன் பின்னர் பிரியங்கா தன்னுடைய கதையை சொல்லும் பொழுது அந்த கதைக்கு ராஜூ டிஸ்லைக் போட்டுவிட்டார். அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம் அக்ஷரா விஷயத்தில் பிரியங்கா சொன்ன அட்வைஸ் தான். இப்போது அதை புரிந்து கொண்டு பிரியங்கா விஷயத்தில் செயல்படுவதாக ராஜூ கூறி இருந்தார். இதற்கு டென்ஷனான பிரியங்கா இதை சின்ன பொண்ணு மற்றும் என் விஷயத்தில் மட்டும் செய்திருக்கிறாயே? அக்ஷரா விஷயத்தில் ஏன் செய்யவில்லை? என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ராஜுவை அபிஷேக் கலாய்க்க, இருப்பினும் தன் டென்ஷனை காட்டாமல் கொஞ்சம் கூலாகவே, அபிஷேக்கிடம் பேசிய ராஜூ, “நானே செம கடுப்பில் இருக்கிறேன். நீ இதே மாதிரி பேசி கொண்டு இருந்தா.. நான் ஒருமாதிரி பேசிடுவேன்.. ரெண்டு பேருக்கும் சண்டை வந்துடும். அதனால் அதெல்லாம் வேண்டாம் என்று பார்க்கிறேன்” என்று கூற, அபிஷேக், “சண்டை போடலாமே.. நீங்க ஜாலியா பேசுங்க.. நான் எப்படியும் எதுவும் பேசமாட்டேன். ஆக பரிதாப வாக்குகளை நான் பெற்றுக் கொள்வேன்.” என்று கூறுகிறார். 

அப்போது ராஜூ, மீண்டும்,  “ஓ.. இவ்வளவு நேரம் நீ காமெடியா தான் பேசிக்கொண்டு இருக்கிறாயா? நான் கூட சீரியசாக பேசிக்கிட்டு இருக்க என்று நினைத்தேன்!” என்று சொல்லி கட்டி பிடித்து விட்டு கிளம்பிவிட்டார். தொடர்ந்து ராஜூவின் செயல்பாடுகள் பிக்பாஸ் வீட்டில் கவனிக்கப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

After raju liked akshara story he warns abishek biggbosstamil5

People looking for online information on Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, BiggBossTamil5, Raju will find this news story useful.