சிறப்பு! மிர்ச்சி சிவாவை அடுத்து.. களத்துல இறங்குன நடிகர் சூரி.. கலக்குறாங்கப்பா.. செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 2 பிப்ரவரி 2022:- பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியரை கலர்ஸ் தமிழ் டிவி ஒளிபரப்பவிருக்கிறது.

Advertising
>
Advertising

அன்புள்ள கில்லி

ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அன்புள்ல கில்லி. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, மயில்சாமி, பூ ராமு, இளவரசன் மற்றும் புதுமுக நடிகரன மைத்ரேயா ராஜேஷ்சேகர் என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

Also Read: இதெல்லாம் நியாயமாரே.. ஒரு flow-ல ‘செல்லத்த’ கட்டிப்புடிக்கவே போயிட்டாரு.. யாருப்பா இந்த புது கோமாளி!

கதை என்ன?

தனது மனித நண்பனான ராமு காதலில் வெற்றி காணவும், உண்மையான காதலை கண்டறியவும் அவனுக்கு தோழனான கில்லி (அமிகோ நாய்), உதவுகிறது. எனினும், ஒரு வனச்சரகராக வேடம் தரித்து ஈவு இரக்கமற்ற வகையில் வனவிலங்குகளை கொன்று குவிக்கும் சுந்தர் என்கிற நபர் (மைம் கோபி) இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும்போது ஒரு புயலே உருவாகிறது. சுந்தரின் கோரப்பிடிகளிலிருந்து ராமுவும், கில்லியும் எப்படி தப்பித்து வெற்றி கண்டனர் என்பதே இந்த அன்புள்ள கில்லியின் கதையின் எஞ்சிய பகுதியாக விரிகிறது.

இத்திரைப்படத்தில் கில்லி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அமிகோ என்கிற நாய் நடித்துள்ளது. அமிகோவுக்கு, பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் குரல் கொடுத்திருக்கிறார்.

கில்லிக்கு குரல் கொடுத்த சூரி..

இந்த திரைப்படத்தில் கில்லிக்கு (நாய் அமிகோ) பின்னணி குரல் கொடுத்த அனுபவம் பற்றி நகைச்சுவை நடிகர் சூரி பேசுகையில், “பார்வையாளர்களையும், ரசிகர்களையும் சென்றடையவும், மகிழ்ச்சிப்படுத்தவும், உற்சாகமூட்டவும் இரண்டு மிகச்சிறந்த வழிமுறைகளாக திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.

இத்திரைப்படத்தில் செல்லமாக வளர்க்கும் ஒரு நாயின் கதாபாத்திரத்திற்கு எனது குரலை வழங்கும் எனது தனித்துவமான முயற்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கலர்ஸ் தமிழ் வழியாக இல்லங்களில் உள்ள அனைத்து பார்வையாளர்களையும் மிகப்பெரிய அளவில் இத்திரைப்படம் சென்றடையும் என்பது கூடுதல் திருப்தியளிக்கிறது. இப்பணியில் ஈடுபட்டது ஒரு இனிய அனுபவமாக இருந்த அதே நேரத்தில், சவாலானதாகவும் இருந்தது. இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியோடு ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.

நிகழ்நேரத்தில் விலங்குகள் பேசுகின்ற, இந்த முதல் இந்திய திரைப்படம் வரும் 2022, பிப்ரவரி 6 –ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

ஏற்கனவே சதீஷ் நடிப்பில் வெளியான்  ‘நாய் சேகர்’ படத்தில், வரும் முக்கிய கதாபாத்திரமான நாய்க்கு பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான மிர்ச்சி சிவா குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் சூரியும் இதேபோல் அன்புள்ள கில்லி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் கில்லிக்கு நடிகர் சூரி குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: கேள்வியால் வேலி போட்ட ஜூலி! ‘உங்க மேல அட்டென்ஷன் வரணும்னு செய்றீங்க!’.. அசராமல் அடிக்கும் அனிதா!

தொடர்புடைய இணைப்புகள்

After Naai Sekar Mirchi Shiva Soori did this for anbulla ghilli

People looking for online information on Anbulla Ghilli, Anbulla Ghilli movie, Dog Ghilli, Mirchi Shiva, Naai Sekar, Soori will find this news story useful.