நேத்து பண மூட்டை.. இன்னைக்கு பணப்பெட்டி.. முதல் தடவை BIGG BOSS -ல நடந்த மாற்றம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "என்னை பொறுத்தவரைக்கும் அந்த விஷயம்".. ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதா சொன்ன விஷயம்.!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் கட் செய்து போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பண மூட்டையை தொடர்ந்து தற்போது பணப்பெட்டி வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த சீசன் 6-ல் முதன் முறையாக பிக்பாசில் பண பெட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் பைனலிஸ்ட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் எனவும் பிக்பாஸ் அறிவிக்கிறார்.

மேலும், இந்த நிமிடம் முதல் பணப்பெட்டியில் உள்ள பணம் அதிகரித்துகொண்டே இருக்கும் எனவும் பிக்பாஸ் சொல்ல போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் அதனை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Also Read | "பிக்பாஸ் வீட்ல இவங்களை ரொம்ப பிடிக்கும்".. வெளியேறிய பின் மனம் திறந்த ADK..!

தொடர்புடைய இணைப்புகள்

After money sack now Money suitcase introduces in BB

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Money suitcase in Bigg Boss House, Vijay tv will find this news story useful.