மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு, ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு தற்போது மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின் செம குஷியாக இருக்கிறார். மாநாடு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில்  சென்னையில் நடைபெற்றது. அதில் சிம்பு பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

இப்போது, சிம்பு-கௌதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் மூன்றாவது முறையாக இணையும் "வெந்து தணிந்தது காடு" படத்தின் Glimpse  "Journey of Muthu" என்ற பெயரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வழக்கமான கௌதம் மேனன் படமாக இல்லாமல் இது சற்று வித்தியாசமாக தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற படங்களை விட இப்படம் வேறுபட காரணம், இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்பு அங்காடித்தெரு, நான் கடவுள்,பாபநாசம் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். சிம்புவின் அடுத்த படமான கொரோனா குமார் படத்தின் அப்டேட்கள் வருகின்றன.

அடுத்தடுத்து படங்களில் படு பிஸியாக இருக்கிறார் சிம்பு. இந்நிலையில் சிம்புவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதில் அகில இந்திய சிலம்பரசன் T.R ரசிகர் மன்ற தலைவர் T. வாசு நடிகர் சிம்புவிடம் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார்.

சிம்பு தனது ரசிகர்களை பெரிதும் மதிக்க கூடியவர். நான் மீண்டும் நடிப்பது எனது ரசிகர்களுக்காக மட்டுமே என்று கூறினார். இந்நிலையில் விரைவில் நடிகர் சிம்பு அவரது ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய இணைப்புகள்

After Maanaadu hit Surprise news waiting for Silambarasan fans

People looking for online information on சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, Maanaadu, Silambarasan will find this news story useful.