"பத்தி எரிஞ்சா கூட.. லைலா இதான் பண்ணுவாங்க..".. 22 வருசம் கழிச்சு பிரசாந்த்-லைலா.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில், 90-களின் காலகட்டங்களில் இருந்தே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்த்.

Advertising
>
Advertising

ஜீன்ஸ், திருடா திருடா, ஜோடி உள்ளிட்ட ஏராளமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் அதிக பிரபலம் ஆனவர் பிரசாந்த்.

தொடர்ந்து, தற்போது பிரசாந்தின் தந்தை தயாரித்து இயக்கி வரும் 'அந்தகன்' திரைப்படத்தில் நாயகனாக பிரஷாந்த் நடித்துள்ளார்.

பிரசாந்தின் அடுத்த படம்..

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த அந்தாதூன் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான் 'அந்தகன்'. இந்த படத்தில் பிரசாந்த்துடன், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இதர போஸ்டர்கள், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருந்த பாடல்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது. இதில் பிரசாந்த், அவரது தந்தை தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.
செம ஜாலியா..

இந்நிலையில், "பார்த்தேன் ரசித்தேன்" படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை லைலாவுடன், பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தார் பிரசாந்த். பார்த்தேன் ரசித்தேன் படப்பிடிப்பின் போது, நடந்த பல தகவல்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அது போல, நேர்காணல் முழுவதும், பிரசாந்த் மற்றும் லைலா என இருவரும் மிகவும் ஜாலியாக சிரித்துக் கொண்டே பதிலளித்து வந்தனர்.

பிரசாந்த் இப்படிப்பட்ட ஆளு தான்..

இதற்கு மத்தியில், பிரசாந்த் மற்றும் லைலா ஆகியோர், மற்றொருவரிடம் தங்களுக்கு பிடித்தமான விஷயம் என்ன என்பது பற்றி பேசியிருந்த விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பிரசாந்திடம் தனக்கு பிடித்த விஷயம் என்ன என்பது பற்றி பேசிய லைலா, "அவரு ரொம்ப இனிமையா இருப்பாரு. ரொம்ப ரொம்ப Chill ஆன ஆளு தான் பிரசாந்த்" என சிரித்த முகத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

என்ன வேணா நடக்கட்டும்..

தொடர்ந்து, லைலாவிடம் தனக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த், "பக்கத்துல பத்தி எரிஞ்சுக்கிட்டு இருந்தாலும், சிரிச்சுகிட்டே தான் இருப்பாங்க. சுத்தி என்ன நடந்தாலும், எப்பவும் சிரிச்சுகிட்டே தான் இருப்பாங்க" என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பின், பிரசாந்த் மற்றும் லைலா ஆகியோர் ஒன்றாக சந்தித்துக் கொண்ட நேர்காணல் நிகழ்ச்சியின் வீடியோவைக் காண :

"பத்தி எரிஞ்சா கூட.. லைலா இதான் பண்ணுவாங்க..".. 22 வருசம் கழிச்சு பிரசாந்த்-லைலா.. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

After 22 years Laila and prashanth exclusive interview

People looking for online information on Andhagan, Exclusive interview, Laila, Prashanth will find this news story useful.