இந்த ஜனனி மேல அம்புட்டு பாசம் வெச்சேன்.. கொச்சப்படுத்திட்டா.. .. குமுறிய ஏடிகே.! BIGG BOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | வித்தியாசமான லுக்கில் RJ பாலாஜி.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 1st லுக் போஸ்டர்! முழு விவரம்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில்   ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

இதில்தான், தனலட்சுமி - மணிகண்டன் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, இறுதியில் அந்த பொருட்கள் மணிகண்டன் கையில் வந்துவிடுகின்றன. இதில், தனலட்சுமி மிகவும் ஆவேசமாக தன்னை தள்ளிவிட்டு தன் கையிலிருந்து பிடுங்கி மணிகண்டன் பொருட்கள் எடுத்துக் கொண்டதாக கூறுகிறார். இந்த பேச்சில் தனலட்சுமி மரியாதைக் குறைவாகப் பேசுவதாய் சொன்ன மணிகண்டன்,    “உன் வயது என்ன? என்னை எப்படி ‘டா’ என்று சொல்கிறாய்?” என்று இன்னும் கொதிக்கிறார். அதன்பிறகும் இவர்களுடைய சண்டை பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்கிறது.

மேலும் தனலட்சுமி சொல்வது போல், அவரை தள்ளிவிட்டு அவர் கையிலிருந்து பிடுங்கி பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்று ஆவேசமாக மணிகண்டன் பதில் சொல்ல, இதை யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று தனலட்சுமி சாட்சிக்கு மற்ற ஹவுஸ் மேட்ஸை கேட்கிறார். இவர்களின் வாக்குவாதம் இப்படி இந்த வீட்டில் தொடர்கிறது. இறுதியில் நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்க என்று ஆவேசமாக தனலட்சுமி கூறினார்.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் நல்லவர் என்கிற முகமூடியை அணிந்திருப்பவர் யார்? என கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜனனி, ஏடிகே என சொல்கிறார். இதை கேட்டதும் ஏடிகே, “இதனாலதான் நான் எலிமினேட் ஆகிடுவேனு வீட்ல எல்லாருகிட்டயும் சொல்லிகிட்டு திரியுறியா?” என்கிறார்.

பின்னர் ஜனனியிடம் பேசும் ஏடிகே, “இந்த வீட்டில் நான் ஒரு தங்கை போல் உன்னை பார்த்தேன்  ஜனனி, அதனால் தான் உன்னை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணேன், உன் மீது அன்பு வைத்தேன். இந்த புள்ளை ஜனனி மீது வைத்த பாசத்தை யார் மீதும் நான் வைக்கவில்லை. ஜனனி , நான் உன்மீது வைத்த தனிப்பட்ட அன்பை நீ கொச்சப்படுத்திவிட்டாய்.. அதனாலேயே நான் என்னுடன் பேசமாட்டாயா? என அவள் பின்னாலேயே போய் போய் கேட்டேன்” என உருக்கமாக பேசுகிறார்.

Also Read | பரத்.. வாணி போஜன் நடிக்கும் 'மிரள்' .. மலேசியாவில் வெளியிடும் பிரபல நிறுவனம்.!

தொடர்புடைய இணைப்புகள்

ADK emotional over janany complaint bigg boss 6 tamil

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vijay tv will find this news story useful.