"நான் விக்ரமன் -அ வேணும்னே புறக்கணிக்கல".. சர்ச்சையான சம்பவம்.. ADK கொடுத்த விளக்கம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "DD முன்னாடி நிக்குறவங்க".. ராமாயணத்தை வெச்சு விக்ரமன் சொன்ன உதாரணம்.. Bigg Boss

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருந்தது.

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குகளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

இப்படியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார். இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறியதையடுத்து விக்ரமன் குறித்து ட்வீட் ஒன்றையும் அவர் செய்துள்ளார்.

முன்னதாக, தான் எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்டதும் அசிமை கட்டியணைத்து சில உருக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார் ADK. இதற்கடுத்து, மற்ற போட்டியாளர்களும் வாழ்த்தி அவரை வெளியே அனுப்பி வைக்க, ADK-விற்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்ததாகவும் அசிம் கூறி இருந்தார்.

இதனிடையே, ADK வெளியே வரும் போது அவர் விக்ரமனை புறக்கணித்ததாக ஒரு கருத்து பரவி வந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் மிகவும் சிறந்த நண்பர்களாக ஏடிகே மற்றும் விக்ரமன் ஆகியோர் வலம் வந்திருந்தனர். நிறைய பிரச்சனைகள் வரும் போது கூட, ஒருவரை ஒருவர் பலமுறை தேற்றவும் செய்திருந்தனர். அப்படி இருக்கையில், ஏடிகே வெளியேறிய போது அவர் விக்ரமனை புறக்கணித்து சென்றதாக கருத்து உருவாகி இருந்தது.

இதனையடுத்து, இதற்கான விளக்கம் பற்றி தற்போது ட்வீட் செய்துள்ள ஏடிகே, "விக்ரமன் ஒரு சிறந்த நண்பன். அவருடைய நட்பை நான் என்றும் போற்றுவேன். கலவையான உணர்ச்சிகளுடன் தான் நான் வெளியேறினேன். அவரை நான் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை" என தனது விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.

Also Read | "ராம், விக்ரமன் -க்கு அப்புறம்".. அசிம் பற்றி ADK ட்வீட்.. "ரொம்ப எமோஷனல் ஆயிட்டாப்ல"

தொடர்புடைய இணைப்புகள்

ADK about he ignored vikraman and give explanation

People looking for online information on ADK, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.