வரலட்சுமி பெயரில் நடந்த மோசடி.. அதிர்ச்சியடைந்த நடிகை.!! ஒரு முக்கியமான வேண்டுகோள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கியமான வேண்டுகோளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் போடா போடி படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் இவர் பல திரைப்படங்களில் இப்போது பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, ''நேற்று இரவு முதல் எனது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் அக்கவுன்டுகளை ஹேக் செய்துள்ளார்கள். இதற்காக நான் சம்பந்தப்பட்ட குழுவுடன் பேசி கொண்டிருக்கிறேன். அதை மீட்க சில நாட்கள் ஆகலாம் என தெரிகிறது. 

என்னை பின் தொடர்பவர்கள் அடுத்த சில நாட்களுக்கு எனது அக்கவுன்ட்டில் இருந்து வரும் மெசேஜ்கள் குறித்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த பிரச்சனை சரி ஆன பிறகு, நான் அதை முறையாக அறிவிப்பேன்'' என அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினான வரலட்சுமியின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

வரலட்சுமி பெயரில் நடந்த மோசடி | actress varalaxmi sarathkumar press note on fake account

People looking for online information on Varalaxmi Sarathkumar will find this news story useful.