வனிதா விஜயகுமார் கொடுத்த வார்னிங்.! - ''எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீங்க கொலைக்காரங்க தெரியுமா.?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி கமன்ட் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது.

இந்நிலையில் தன்னை பற்றி அவதூறாக கமன்ட் செய்யும் இணையவாசிகளுக்கு வனிதா ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது பதிவில், ''இப்போது நீங்கள் சாதாரணமாக என்னை பற்றி பதிவிடும் கமன்ட்டுகள் சட்டத்திற்கு புறம்பானவை. Cyber Bullying என்பது விளையாட்டல்ல, அதனால் ஒருவரின் உயிரே கூட போகலாம். ஏன், உங்களின் தரக்குறைவான கமன்ட்களால் எனக்கு எதுவும் ஆனால், நீங்கள்தான் கொலைகாரர்கள் தெரியுமா.? அதனால் முதலில் சிந்தித்து செயல்படுங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நெட்டிசன்களுக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வார்னிங் | Actress Vanitha Vijaykumar warns Netizens over Commenting on Her marriage

People looking for online information on Cyber Bullying, Vanitha, Vanitha Vijaykumar will find this news story useful.