சூர்யாதேவி விவகாரத்தில் பளீச்சென்று பேசிய வனிதா விஜயகுமார்.! ''சில விஷயங்களை நான் சொல்லல..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமார் சூர்யாதேவி குறித்து பளீச் கருத்தை தெரிவித்துள்ளார். 

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

இதனிடையே இவரின் திருமணத்தை தொடர்ந்து, பல சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக சூர்யாதேவி என்பவர் வனிதா விஜயகுமாரை விமர்சித்து பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து வனிதாவின் தரப்பில் இருந்து சூர்யாதேவி குறித்த பரபரப்பான ஆதாரங்கள் வெளியாகின. அவர் மீது காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் சூர்யாதேவி மீது புகார் கொடுத்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த வனிதா கூறியதாவது, ''சூர்யாதேவியின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, அவர் பொது மன்னிப்பு கேட்டால், இந்த பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என சொன்னோம். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை. மேலும் அவர் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் விரும்புகிறார். நாங்கள் அவரை பற்றி கிடைத்த பல ஆதாரங்களை காவல்துறையிடம் கொடுத்திருக்கிறோம். சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது, அதனால்தான் அதை மீடியாவில் கொடுக்காமல், நேரே போலீஸிடம் கொடுத்துள்ளோம். போலீஸ் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் Cyber Bullying என்பது எவ்வளவு தவறானது என எல்லோருக்கும் தெரியும்'' என கூறினார் வனிதா. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாதேவி பற்றி நடிகை வனிதா விஜயகுமார் பளீச் | Actress Vanitha Vijaykumar Recent Video on Suryadevi Issue

People looking for online information on Peter Paul, Suryadevi, Vanitha, Vanitha Vijaykumar will find this news story useful.