''நிச்சயம் ரவீந்தரை ஒரு கை பார்ப்பேன்'' - நடிகை வனிதா ஆக்ரோஷம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து பீட்டர் பாலின் முன்னாள் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்க, இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சூர்யா தேவி என்ற பெண் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் தன்னை பற்றி அவதூறு  பேசுவதாக நடிகை வனிதா புகார் அளித்துள்ளாராம். இதுகுறித்து Behindwoods TVக்கு பேசிய அவர், ''நான் தைரியமான பெண். எதற்கும் அவ்வளவு சீக்கிரம் அசராத ஆள்.  ஆனால் ஒரு பெண்ணால் எவ்வளவு தான் போராட முடியும் ?  இந்த உலகத்தில் எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள் இருக்கிறார்கள்

தயாரிப்பாளர் ரவீந்திரன் யார் என் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசுவதற்கு. அவரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து  தள்ளி வைக்க வேண்டும். என்னை மிஸ்யூஸ் பண்றாங்க. நான் அந்த ஆண்டவனை நம்புகிறேன். எனக்கு மனசாட்சிக்கு தெரியும். நான் எந்த விதமான துரோகமும் செய்யவில்லை. அவர் சட்டப்படி அவர் பதில் சொல்லியாக வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரவழைப்பேன். கண்டிப்பா அவரை ஒரு கை பார்ப்பேன் என்று ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

''நிச்சயம் ரவீந்தரை ஒரு கை பார்ப்பேன்'' - நடிகை வனிதா ஆக்ரோஷம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Actress Vanitha condemned about Producer Ravinder's statement | தயாரிப்பாளர் ரவீந்தரின் பேச்சுக்கு நடிகை வனிதா கண்டனம்

People looking for online information on Ravind, Vanitha Vijayakumar will find this news story useful.