நடிகையை பற்றி மோசமாக கமெண்ட்... சிக்கிய ஆசாமி... அடுத்து இப்படி நடக்கும்னு யாரும் நெனைக்கல...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலங்களுக்கு சமூகவலைதளங்கள் மூலம் தொல்லை தருவது தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி மலையாள நடிகை அபர்ணா நாயரின் பதிவில் அஜித் குமார் என்ற தந்தை வயது இருந்த நபர் ஒருவர் மிகவும் மோசமான கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நடிகை அதிர்ச்சி அடைந்து அவரது முகத்தை மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்டி, பின்பு சைபர் கிரைம் போலீஸீல் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஆக்ஷனில் இறங்கிய போலீஸ் அவரை கைது செய்தது. பிடிபட்ட அந்த நபரை சைபர் செல் ஆஃபீஸில் நடிகை பார்க்க நேர்ந்தது. பலரும் நடிகை அவரை மோசமாக கிழிக்க போகிறார் என்று காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நடந்தது வேறு.

அவரை பார்த்த நடிகை  புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இதுபற்றி கூறிய அபர்ணா நாயர் "அவரது குடும்பம் மற்றும் பொருளாதார சூழ்நிலையை கணக்கில் கொண்டு இந்த புகாரை வாபஸ் பெறுகிறேன். இனி எந்த பெண்ணிடமும் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று அவர் தன் கைப்பட எழுதி கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நெட்டிசன்கள் நடிகையின் இந்த உயர்ந்த மனதை பாராட்டி வருகின்றனர்.

நடிகையிடம் மோசமாக கமெண்ட் சிக்கிய நபர் Actress take different action on cyber harassment

People looking for online information on Aparna Nair, Cyber Crime will find this news story useful.