"அவரை பகைச்சுக்கிட்டா வெச்சு செஞ்சிடுவாரு".. SHOOTING ஸ்பாட்ல அசீம் இப்டி தான்.. நடிகை சுபத்ரா EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இதில் பிரபல சீரியல் நடிகர் அசீமும் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

Advertising
>
Advertising

அவ்வப்போது பிக்பாஸ் போட்டியாளர்களிடம் அதிகம் கோபப்படும் அசீம், மறுபக்கம் சிறந்த முறையில் நட்பாகவும் பழகி வருகிறார். அதே போல, சிறந்த போட்டியாளராகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் அசீம் வலம் வருகிறார்.

இந்த நிலையில், சீரியல் நடிகையான சுபத்ரா அசீம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது குறித்து தெரிவித்துள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இது பற்றி பேசும் நடிகை சுபத்ரா, "அவர பகைச்சிக்கிட்டா வச்சு செஞ்சிருவாரு. தனிப்பட்ட முறையில் அவரிடம் எனக்கு எந்த அனுபவமும் இப்படி ஏற்பட்டது இல்லை. ஆனால் சக நடிகைகள் இப்படி சிக்கலுக்கு உள்ளானதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை ஹீரோயினிடம் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் பெயர் வர்ஷினி. கர்ப்பவதியாக அவர் நடிக்க வேண்டிய காட்சி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. எப்போதுமே அசீம் காலை 11 மணிக்கு பிறகு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். முன்னரே இது பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நாங்கள் அனைவரும் முன்பே சென்று மேக்கப் போட்டுக் கொண்டு அவருக்காக காத்திருப்போம் . 11 மணிக்கு அவர் வந்ததற்கு பிறகும் அவர் மேக்கப் போட்டுக் கொண்டு வந்து ஷார்ட் எடுக்க 12 மணியை கடந்து விடும். கர்ப்பவதியாக நடித்த அந்தப் பெண் வயிற்றில் ஒரு பேட் போன்று வைத்திருப்பார்கள். ஷூட்டிங் இப்படி தாமதமாகி கொண்டே இருப்பதால் அவருக்கு முதுகுத்தண்டில் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது.

அசீம் தாமதமாக வருவதாகவும் வயிற்றில் பேட் உடன் காத்திருப்பதால் தனக்கு வலி ஏற்படுவதாகவும் அவர் கூறிவிட்டார். இதே போல தேவிப்பிரியா அவர்களுக்கும் அசீமிற்கும் ஒருமுறை வாக்குவாதம் ஏற்பட்டது எப்போதும் தேவிப்பிரியா மேடம் எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டார். தனக்கான வேலைகளை செய்து விட்டு அவர் அமைதியாக இருக்கக் கூடியவர். சூட்டிங் ஸ்பாட்டில் சில நேரம் ஸ்கிரிப்டில் இல்லாத சில வார்த்தைகளை அசீமே பேசுவார். அப்படி ஒரு முறை தேவி பிரியா மேடமிடம் அவர் பேச அதற்கு தேவி பிரியா மேடம் இந்த சீனை பொறுத்தவரையில் நான் அமைதியாக நின்று கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏன் அதை பேச வேண்டும் என்றார். அப்போது இயக்குனரிடம் நான் தேவிப்பிரியாவை வாடி போடி என்று அழைக்கலாமா ?என அசீம் கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி பிரியா மேடம் ஏன் எல்லாத்தையும் பர்சனல் ஆக எடுத்துக் கொள்கிறீர்கள் என அசீமிடம் கேட்டார். ஒருபக்கம் வர்ஷினி பிரச்சனை மற்றொரு புறம் இந்த சிக்கல்.

அடுத்தநாள் நாங்கள் யாருமே நடிக்கவில்லை. அப்போது,அசீம் இயக்குனரிடம் இங்கே நீங்கள் டைரக்டரா? இல்லை மற்றவர்களா எனக் கேட்டார். இதை பேசிய பிறகு ஷூட்டிங்கிற்கு செல்லலாம் என்றார். அப்போது வர்ஷினி நேற்று நான் பேசியதில் எந்த தவறுமில்லை என்றார். இதனால் கோபமடைந்த அசீம், வெளியே போடி என்றார். மரியாதையாக பேசும்படி வர்ஷினி கூறினார். தொடர்ந்து அசீம் கோபத்தில் ஐ வில் ஸ்லிப்பர் யூ (செருப்பால அடிப்பேன் ) எனவும் கூறினார் . இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவர் மன்னிப்பு கேட்கும் வரையில் நடிப்பதில்லை என முடிவெடுத்து தனியாக ஒரு அறையில் சென்று அமர்ந்து விட்டோம் . தயாரிப்பாளர் எங்களிடம் வந்து சமாதானம் செய்தார். ஆனால் அசீம் இப்படி பேசியது தவறு என அவரிடம் சொன்னோம். அதன் பிறகு அசீமிடம் அவர்கள் பேசியதாக தெரிகிறது . அதன் பின்னர் அசீம் எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டார்" என நடிகை சுபத்ரா தெரிவித்தார்.

"அவரை பகைச்சுக்கிட்டா வெச்சு செஞ்சிடுவாரு".. SHOOTING ஸ்பாட்ல அசீம் இப்டி தான்.. நடிகை சுபத்ரா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress subathra about azeem in serial shooting spot

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Subathra will find this news story useful.