பெரும் சோகம்!!! 9 முறை மூளை அறுவை சிகிச்சை செய்த பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சின்னத்திரையில் பிஸி நடிகையாக வளம் வந்தவர் சரண்யா சசி.

இவர் சில வருடங்களுக்கு முன்புதான் பயங்கரமான தலைவலி காரணமாக மருத்துவரை அணுகினார். அப்போது இவருக்கு மூளையில் கட்டி இருந்தது தெரிய வந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் வீடு திரும்பிய நடிகை சரண்யா நலமாக இருந்து வந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவருக்கு மீண்டும் தலைவலி தொடர்ந்தது. இதனால் 2வது முறையாக அறுவை சிகிச்சை செய்தார். அதன் பின்னும் இவருக்கு இருந்த தீராத தலைவலியால் மேலும் 7 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சிகிச்சைகளால் நடிகை சரண்யா படிப்படியாக குணமாகி வந்தார் என்று ரசிகர்களும் அவரது குடும்பத்தாரும் சந்தோஷப்பட்டனர். ஆனாலும், நடிகை சரண்யா இன்று சிகிச்சை பலனின்றி தீடீரென திருவனந்தபுரம் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

தென்னிந்திய சின்னத் திரையுலகை மட்டுமல்லாது, திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த செய்தியை தொடர்ந்து பலரும் சரண்யாவின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விவேக் & மிர்ச்சி சிவாவின் புதிய காமெடி ரியாலிட்டி சீரிஸ்! அமேசான் ப்ரைமில்..  வெளியான அசத்தல் Promo!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Saranya Sasi passes away 9 surgery brain tumour

People looking for online information on ActressSaranya, RIP, RIPSaranya will find this news story useful.