சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருபவர். ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்பவர். இப்படி எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் சமந்தா இப்போது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.
விவாகரத்துக்கு பின் தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம், ‘'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை இன்ஸ்டாகிராமில் நிகழ்த்தினார் நடிகை சமந்தா. அதில் ரசிகர் ஒருவர், பச்சை குத்துவது பற்றி யோசனைகள் கேட்டார். அதற்கு பதில் அளித்த சமந்தா "எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் பச்சை குத்தாதிர்கள், எக்காரணம் கொண்டும்." என பதில் அளித்தார்.
சமந்தா தனது வலது விலா எலும்புக் கூண்டில் ‘Chay’ என்ற பெயரை பச்சை குத்தியுள்ளார். கழுத்தில் 'யே மாயா சேசா'வின் முதலெழுத்துக்களான 'ஒய்எம்சி'. மேலும், மூன்றாவது வலது மணிக்கட்டில் இரட்டை அம்புக்குறி வைக்கிங் சின்னத்தை பச்சை குத்தி இருந்தார்.