மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை ரோஜா... பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரோஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும் பதவி வகித்து வருகிறார்.

நடிகையும் அரசியல்வாதியுமான ஆர்.கே.ரோஜாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவரது உடல் நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தற்போது தொலைக்காட்சி யின் பிரபலம் நன்றாக இருப்பதாக அவர்களுக்கு உறுதிஅளித்த அவர், "இப்போது ரோஜா நன்றாக இருக்கிறார்.அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்து, அவர் குணமடைந்து வருகிறார்.இதுவரை பல முறை தள்ளிப் போட்டிருக்கிறார்" என்றார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவர், என்ன அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவரது உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிரார்த்தனைகளை பகிர்ந்து வருகின்றனர். ரோஜா தற்போது தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Roja

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress roja undergoes two unknown surgeries மருத்துவமனையில் நடிகை ரோஜா

People looking for online information on Roja will find this news story useful.