சுஷாந்த் சிங் மரணம் குறித்த சர்ச்சை.. காதலியும் நடிகையுமான ரியா எடுத்த பளீச் முடிவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சர்ச்சையில், அவரது காதலி ரியா சக்ரபொர்த்தி அடுத்தக்கட்ட முடிவை எடுத்துள்ளார். 

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே, சுஷாந்த் சிங்கின் மரணத்தில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபொர்த்தி என்பவருக்கு தொடர்பிருப்பதாகவும், அவர் சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகவும், சுஷாந்த் சிங்கின் தந்தை புகாரளித்தார். இது சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது நடிகை ரியா சக்ரபொர்த்தி, இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுகுறித்த தனது மனுவில், ''சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது தந்தை என்னை பற்றி தவறாக புகாரளித்துள்ளார். அவரின் மரணத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கை மும்பை போலீஸ் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் மரணம் - காதலி எடுத்த முடிவு | Actress Rhea Chakraborty takes her next step in sushant singh death issue

People looking for online information on Rhea Chakraborty, Sushant Singh Death, Sushant Singh Rajput will find this news story useful.