போதை மருந்து பிரிவு எடுத்த அதிரடி நடவடிக்கை.. சுஷாந்த் சிங்-ன் காதலி கைது.! விவரம் என்ன..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போதை மருந்து பிரிவினர் எடுத்த அதிரடி நடிவடிக்கையை தொடர்ந்து பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியாவுக்கு அவரது தற்கொலை தொடர்பிருப்பதாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்துகள் வழங்கியதாக சந்தேகிக்கப்பட்டு., அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ராபொர்த்தி மற்றும், அவரின் சகோதரர் சௌவிக் இடமும் விசாரணை நடத்தப்படடது. இதை தொடர்ந்து தற்போது நடிகை ரியாவை போதை மருந்து தடுப்பு பிரிவினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ரியாவின் வாட்சப் மெசேஜ்களை கொண்டு இந்த விசாரணை நடைபெற்று இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. சுஷாந்த் சிங் காதலியின் கைது., பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் வழக்கில் நடிகை கைது | Actress Rhea chakraborthy arrested after drug allegation on sushant singh

People looking for online information on Drugs, Rhea Chakraborthy Arrested, Rhea Chakraborty, Sushant Singh Rajput will find this news story useful.