கொரோனாவால் பிரபல நடிகை மரணம்... பரவிய வதந்தி.... நடிகை வெளியிட்ட அவசர பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றார். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.

இந்நிலையில் இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான ஜெயா பட்டாச்சாரியா கொரோனாவால் மரணமடைந்து விட்டதாக செய்தி பரவியது. இவர் இந்தியில் ஏராளமான சீரியல்களில் வில்லியாக நடித்தவர். சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டனர். இதனை பார்த்த நடிகை  மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் உயிருடன் தான் இருக்கிறேன். இப்படி பதிவிடும் முன்பு தீர விசாரித்து பதிவிடுங்கள்" என்று கூறியுள்ளார். இந்த கடினமான சூழலிலும் கூட தேவையில்லாத வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவால் நடிகை மரணம் பரவிய வதந்தி Actress responds shockingly on her corona death rumors

People looking for online information on Corona, Jaya Bhattacharya, Rumour will find this news story useful.