தன்னோட எலிமினேஷன் பத்தி... 'அவங்க' என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆமாம். நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளர் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். இதில் முதல் வாரம் எவிக்ஷன் இல்லை என சொல்லி விட்டனர். தொடர்ந்து 2-வது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் ஷிவானி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரியலா, ஆஜீத், ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம் பிடித்தனர்.

வீட்டின் தலைவர் என்பதால் சுரேஷ் சக்கரவர்த்தி தப்பித்து விட்டார். இதில் நேற்று ஷிவானி, ரம்யா, ஆஜீத் மூவரும் காப்பாற்றப்பட்டு விட்டதாக கமல் அறிவித்தார். இதனால் ரேகா, சம்யுக்தா, கேப்ரியலா மூவர் மட்டுமே எஞ்சினர்.  இதில் சனம் ஷெட்டி கேமரா முன்னால் வாக்குமூலம் எல்லாம் கொடுத்து தன்னுடைய பயத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் வாக்குகள் அடிப்படையில் ரேகா வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்துள்ளது.

 

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேகா தெரிவித்து இருக்கிறார். பர்ஸ்ட் எலிமினேஷன் என்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் வெளியேற்றப்பட்டு இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.  முதல் கமெண்டாக சிரிப்பது போல ஹாஹா என தெரிவித்து இருக்கிறார். ரசிகர் ஒருவர் இது தவறான தகவல் தானே என கேள்வியெழுப்ப, அதற்கு ரேகா நான் இன்று வெளியேறி விட்டேன் என பதிலளித்து இருக்கிறார். கமெண்ட் செய்த பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என ரிப்ளை செய்திருக்கிறார்.

தன்னோட எலிமினேஷன் பத்தி... 'அவங்க' என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rekha confirmed her elimination on Instagram

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.