''நான் இன்னொரு சுஷாந்த்தை தமிழ்நாட்டில் பார்க்க விரும்பல...'' - பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகையான ஓவியா தனது யதார்த்தமான நடவடிக்கைகளால் ஓவியா ஆர்மி என்ற பெயரில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

 

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வது குறித்து ரசிகர்களின் கருத்துக்களை கேட்டிருந்தார். இந்த விஷயம் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வந்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில், ''நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த நிகழ்ச்சி கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். நாமெல்லாம் மனிதர்கள்'' என்றும் மற்றொரு ட்வீட்டில், ''நான் இன்னொரு சுஷாந்த்தை தமிழ்நாட்டில் பார்க்க விரும்பவில்லை விடுங்க, இது என் தவறு தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Oviya's tweet about BiggBoss Goes Viral | பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவின் ட்வீட் வைரல்

People looking for online information on Bigg boss, Oviya will find this news story useful.