''உயிருடன் இருக்கும் போதே.., இறந்து போனதாக சொல்லி..'' - அந்த தமிழ்ப்பட நடிகை பகீர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இளம் நடிகை, தன்னை பற்றி வந்த தவறான செய்தி குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அண்மை காலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவது குறித்து பெரும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. மேலும் இந்த தவறான செய்திகளின் உண்மைத்தன்மையை விசாரிக்காமல், பலரும் ஷேர் செய்வதை தொடர்ந்து சுட்டி காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை இறந்துவிட்டதாக தவறான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடித்துள்ளவர் நடிகை மிஷ்டி சக்ரவர்த்தி. இவர் தமிழில் அதர்வா நடித்த செம போத ஆகாத திரைப்படத்தில் நடித்தார். இதனிடையே நடிகை மிஷ்டி சிறுநீரக கோளாறால் கடந்த 2-ஆம் தேதி இறந்துவிட்டதாக தவறான செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து, இந்த விவரத்தை பகிர்ந்துள்ள அவர், ''சில தவறான செய்திகள் நான் இறந்துவிட்டதாக வருகிறது. நான் முழு நலத்துடன் இருக்கிறேன். இன்னும் செல்ல நிறைய தூரம் இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார். 

 

இளம் நடிகை பகீர் தகவல் | Actress mishti chakravarty angry post on fake news about her death

People looking for online information on Fake news, Mishti will find this news story useful.