விஜய் சேதுபதி பட ஹீரோயின் சொல்லும் எமோஷனல் தகவல்.! - ''சர்ஜரிக்கு அப்புறம் இந்த சீன்..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி படத்தின் ஹீரோயின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இத்திரைப்படத்தை Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், அதிதிராவ் ஹைதாரி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அண்மையில் வெளியான போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயமொன்ற நடிகை மஞ்சிமா மோகன் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை பகிர்ந்து அவர், '' துக்ளக் தர்பாரில் நான் நடித்த முதல் காட்சி இதுதான். எனக்கு அப்போதே காலில் அறுவை சிகிச்சை நடைபெற்று இருந்ததால், என்னால் சரியாக எழுந்து கூட நடக்க முடியவில்லை. இதனால் நான் மிகவும் பதட்டமடைந்துவிட்டேன். இதற்கு முன்பு இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கவில்லை. 

அடுத்து டைரக்டர் வந்து சீனை சொல்லிவிட்டு, நான் அதில் நடந்து வரவேண்டும் என சொல்லிய போது நான் ஷாக் ஆகி விட்டேன். கால் வலி தெரியாமல் இயல்பாகவும் நடக்க வேண்டும், அதே நேரத்தில் டைரக்டர் சொல்லிய எமோஷன்ஸ்களை காட்ட வேண்டும். இதை நான் எப்படி செய்வது என தெரியவில்லை. டைரக்டரிடம் எனது பிரச்சனையை சொன்னேன். எதை பற்றியும் கவலைபடாமல், முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள் போதும் என டைரக்டர் சொன்னார். பிறகு அதை நான் சரியாக செய்தேன்.  

இதன் மூலம், வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் முயற்சி செய்து பார்க்காமலேயே, அது முடியாது என்றே நினைத்து கொள்கிறோம் என தெரிந்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார் இந்த இளம் நடிகை. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி பட ஹீரோயின் சொல்லும் எமோஷனல் சம்பவம் | actress manjima mohan opens on shooting of vijay sethupathi's tughlaq durbar

People looking for online information on Manjima Mohan, TughlaqDurbar, Vijay Sethupathi will find this news story useful.