‘சிறையில்’ காதலன்.. வெளியில் மூளையாய் செயல்பட்டு ரூ.200 கோடி மோசடியா? பிரியாணி பட நடிகை கைது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொழில் அதிபரின் மனைவியிடம் இருந்து ரூ. 200 கோடி ஏமாற்றிய வழக்கில் ‘பிரியாணி’ பட இளம் நடிகையை டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு ஆதரவாக செயல்பட்டு 200 கோடி ரூபாய் ஏமாற்றியதாக நடிகை லீனா மரியா பால் தற்போது  கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் ரூ. 200 கோடி ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரசேகரின் காதலியும், ‘பிரியாணி’, ‘மெட்ராஸ் கஃபே’ ஆகிய படங்களில் நடித்த இளம் நடிகையுமான லீனா மரியா பாலை டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக அதிதி சிங் தம் புகார் மனுவில் கூறும்போது, தன் கணவருக்கு ஜாமீன் வாங்கித் தருவதாக கூறி, தன்னிடம் பணம் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் இருந்ததாகவும், சிறையில் இருந்து கொண்டே அவர் லீனா மரியா பால் மூலமாக இந்த பண மோசடியை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் லீனா மரியா பால் கைதானதுடன், சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே  லீனா மரியா பாலை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: கார்த்தி-க்கு ஜோடியாகும் இயக்குநர் ஷங்கர்-ன் மகள்! இண்டஸ்ட்ரியை கலக்கும் வேறலெவல் டைட்டில் லுக் போஸ்டர்! தயாரிக்கும் சூர்யா!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Leena Maria Paul arrested in extorting Rs 200 cr

People looking for online information on Biriyani, Delhi, Leena maria paul will find this news story useful.