நடிகை குஷ்பு அதிரடி கைது... முட்டுக்காடு அருகே காரை மறித்து போலீசார் நடவடிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் மனுதர்மம் தொடர்பான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். அதேபோல் திருமாவளவனை கண்டித்து மகளிர் அணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த போராட்டத்திற்கு தமிழக போலீசார் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்ற நடிகை குஷ்புவை கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் கவுந்தப்பாடியில் திருமணத்தில் பங்கேற்க சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் கருப்புக் கொடி காட்டியதால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து குஷ்பு தனது டிவிட்டர் தளத்தில் "இறுதி மூச்சு வரை பெண்களின் மரியாதைக்காக போராடுவேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress kushboo arrested for protesting நடிகை குஷ்பு அதிரடி கைது

People looking for online information on Kushboo, Thirumavalavan will find this news story useful.