நடிகை குஷ்பூ கண்களில் கட்டு போட்டு வெளியிட்ட போட்டோ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள ரீசன்ட் போட்டோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இவர் பல படங்களில் ஜோடி சேர்ந்து கலக்கினார். இதையடுத்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். தனது ஒரு கண்ணில் கட்டுப்போட்டப்படி அவர் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதுடன், ''ஹாய் ஃப்ரென்ட்ஸ், என்னால் கொஞ்ச நாள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க முடியாது. இன்று காலை எனது கண்ணுக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சீக்கிரமே நலமாக வருவேன் என உறுதியளிக்கிறேன்.'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை குஷ்பூ வெளியிட்ட போட்டோ | Actress khushbus recent pic turns fans shocking

People looking for online information on Khushboo, Khushbu will find this news story useful.